”எனக்கும் கூட்டணி மந்திரி சபை அமைய வேண்டும் என்ற விருப்பம் உள்ளது!” – சொல்கிறார் கார்த்தி சிதம்பரம் – karti chidambaram interview!
புதுக்கோட்டை ரோஜா இல்லம் என்ற விருந்தினர் மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், “அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் தற்போது நடைபெறும் விசாரணைகளை கடந்து,சமுதாய விழிப்புணர்வு வேண்டும். பெண்களை சரிசமமாக பார்க்க வேண்டும். பெண்கள் குறித்து நாம் பார்க்கும் கண்ணோட்டத்தை மாற்ற வேண்டும். சென்னை அண்ணா பல்கலைகழக விவகாரத்தில் நடந்த சம்பவங்களுங்கு கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன். போராடுவதற்கும், துண்டு பிரசுரங்கள் அளிப்பதற்கும் எதிர்க்கட்சிகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும் . மாறாக, அனுமதி மறுக்கக்கூடாது. அண்ணா…









