நீலகிரி: ‘மரத்திற்குப் பின்னால் யானையே நின்றாலும் தெரியாது’ – ஆபத்தான காட்டு வழியில் பயணிக்கும் ஆஷா பணியாளர்கள்
பட மூலாதாரம், Xavier Selvakumar/BBC8 மார்ச் 2025, 08:52 GMTபுதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்”முதுமலை காட்டுக்குள் ஓர் ஆற்றைக் கடந்து நான் ஒரு பழங்குடி கிராமத்துக்குப் போக வேண்டும். மழைக்காலத்தில் வெள்ளம் அதிகமாக வரும் போது ஆண்கள் கயிற்றைப் பிடித்து அக்கரைக்குச் சென்று விடுவார்கள். ஆனால் மருந்து மற்றும் உபகரணங்கள் உள்ள பையை வைத்துக் கொண்டு, கயிற்றைப் பிடித்துச் செல்வது கஷ்டம். அத்தகைய நாட்களில் எனது கணவரை அழைத்துக் கொண்டு போவேன். மரங்களுக்குப் பின்னால் யானை…









