Yearly Archives: 2025

கே.எல்.ராகுல் அதிரடியில் ஆர்சிபியை துவம்சம் செய்தது டெல்லி கேபிடல்ஸ் | ஐபிஎல் 2025 | RCB vs DC highlights, IPL 2025

பெங்களூரு: நடப்பு ஐபிஎல் சீசனின் 24-வது லீக் ஆட்டத்தில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி வெற்றி பெற்றது. பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இதில் டாஸ் வென்ற டெல்லி கேப்டன் அக்சர் படேல் பந்து வீச முடிவு செய்தார். பெங்களூரு அணிக்காக கோலி மற்றும் பிலிப் சால்ட் இணைத்து இன்னிங்ஸை ஓபன் செய்தனர். சால்ட், 17 பந்துகளில் 37 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆனார். 4 ஓவர்களில்…

இந்தியா வழியாக சரக்குகளை ஏற்றுமதி செய்ய வங்கதேசத்துக்கு மறுப்பு – இந்த முடிவால் இந்தியாவுக்கு நஷ்டமா?

பட மூலாதாரம், Reutersபடக்குறிப்பு, வங்கதேசத்தின் காசிபூரில் உள்ள ஒரு ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் ஒரு பெண்.5 மணி நேரங்களுக்கு முன்னர்தங்கள் நாட்டு சரக்குகளை இந்தியத் துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்களில் மற்றொரு கப்பல், விமானங்களுக்கு மாற்றி வேறு நாடுகளுக்கு அனுப்ப வங்கதேசத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. அதனை தற்போது ரத்து செய்துள்ள இந்தியாவின் முடிவால் வங்கதேசம் அதிர்ச்சியடைந்துள்ளது.2020ம் ஆண்டு ஜூன் மாதம் வழங்கப்பட்ட இந்த அனுமதி திரும்ப பெறப்பட்டுள்ளதாகவும், இதனால் இந்திய நிலப்பரப்பு மூலம் நேபாளம், பூட்டான் மற்றும்…

RCB vs DC: `இது என் ஊரு, என் இடம்' – GBU மாமே சொன்ன ராகுல்; RCB யின் வெற்றியைப் பறித்த 3 பேர்

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இன்று நடைபெற்ற (ஏப்ரல் 10) ஐபிஎல் போட்டியில், டெல்லி கேபிட்டல்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆர்.சி.பி-யை வீழ்த்தி, இந்த சீசனில் இன்னும் தோல்வியைக் காணாத அணியாக தனது வெற்றிநடையைத் தொடர்ந்திருக்கிறது. முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 163 ரன்களை மட்டுமே குவித்தது.ரஜத் பட்டிதார் – அக்சர் படேல்பின்னர் களமிறங்கிய டெல்லி அணி, 18 ஓவர்களிலேயே 4 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள்…

30 ஐபிஎல் இன்னிங்ஸில் அதிக ரன்கள்: கெயில், வில்லியம்சனை முந்திய சாய் சுதர்சன்! | Most runs in 30 IPL innings Sai Sudharsan surpasses Gayle Williamson

அகமதாபாத்: நடப்பு ஐபிஎல் சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக 53 பந்துகளில் 82 ரன்கள் எடுத்தார் குஜராத் டைட்டன்ஸ் வீரர் சாய் சுதர்சன். இதன் மூலம் 30 ஐபிஎல் இன்னிங்ஸ் ஆடி, அதிகம் ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். இந்தப் பட்டியலில் கிறிஸ் கெயில், கேன் வில்லியம்சன் ஆகியோரை அவர் பின்னுக்கு தள்ளியுள்ளார். 23 வயதான சாய் சுதர்சன், கடந்த 2022-ம் ஆண்டு ஐபிஎல் சீசன் முதல் குஜராத் அணிக்காக விளையாடி…

இலங்கையில் மோதிக்கு வழங்கப்பட்ட ஒற்றைக்கண் சிறுத்தை படம் – இந்த விலங்கு ஏன் தேடப்படுகிறது?

பட மூலாதாரம், SAJITH PREMADASA’S MEDIA UNITகட்டுரை தகவல்இலங்கையில் ஒற்றை கண் பார்வை இழந்த பெண் சிறுத்தை தொடர்பில் தற்போது அதிகம் பேசப்பட்டு வருகின்றது.இலங்கைக்கான அதிகாரப்பூர்வ விஜயமொன்றை இந்திய பிரதமர் நரேந்திர மோதி அண்மையில் மேற்கொண்டிருந்தார். இதன்போது இந்திய பிரதமர் நரேந்திர மோதியை, இலங்கையின் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்ததுடன், நரேந்திர மோதிக்கு நினைவு பரிசொன்றையும் அவர் வழங்கியிருந்தார்.முன்னோக்கி செல்லும் பெண் சிறுத்தையொன்று பின்னோக்கி திரும்பி பார்க்கும் வகையிலான புகைப்படமொன்றையே சஜித்…

IPL 2025: “இந்த வீரர்கள் எல்லாம் சிறப்பாக விளையாடுகிறார்கள்” – அஷ்வின் சொல்லும் வீரர்கள் யார்?

18-வது ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அஷ்வின் ரவிசந்திரன் தனது யூடியூப் சேனலில் ஐபிஎல் தொடர்பாகப் பல விஷயங்களைப் பகிர்ந்திருக்கிறார். அந்தவகையில் ஐபிஎலில் சிறப்பாக விளையாடி வரும் வீரர்கள் குறித்து அஷ்வின் பேசுகையில், “இந்த சீசனில் நிறைய வீரர்கள் நன்றாக விளையாடுகிறார்கள்.பிரியான்ஷ் ஆர்யாகுறிப்பாக பிரியான்ஷ் ஆர்யா சிறப்பாகப் பேட்டிங் செய்கிறார். கடந்த வருடம் டெல்லி ப்ரீமியர் லீக்கில் பல ரெக்கார்டுகளை முறியடித்திருந்தார். ஒரு வீரரிடம் நல்ல பேட்டிங் ஸ்டைல் இருக்கிறது. நன்றி

`இனி நானே பாமக தலைவர்’ ; தலைவர் பதவியில் இருந்து அன்புமணி நீக்கம் – ராமதாஸ் அதிரடி

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து டாக்டர் அன்புமணி ராமதாஸ் அதிரடியாக நீக்கப்பட்டிருக்கிறார். பா.ம.க. தலைவர் பொறுப்பை இனி நானே எடுத்துக்கொள்ளப்போகிறேன் என்றும் டாக்டர் அன்புமணி ராமதாஸ், பாமகவின் செயல் தலைவராக மட்டுமே செயல்படுவார் என்றும் அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவித்திருக்கிறார். இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ராமதாஸ் – அன்புமணி`அந்த காரணத்தை எல்லாம் சொல்ல முடியாது’தைலாபுரம் தோட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ், “தலைவராக பொறுப்பேற்பதற்கு நிறைய…

‘பாராட்டும் வகையில் இருந்த போராட்ட குணம்’ – வெற்றியை தவறவிட்ட சிஎஸ்கே அணி | csk shows fighting spirit but misses victory versus punjab kings ipl 2025

ஐபிஎல் தொடரில் நேற்​று​ முன்​தினம் முலான்​பூரில் பஞ்​சாப் கிங்ஸ் அணிக்கு எதி​ராக நடை​பெற்ற ஆட்​டத்​தில் 18 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் சிஎஸ்கே தோல்வி அடைந்​தது. நடப்பு சீசனில் சிஎஸ்​கே​வின் 4-வது தோல்​வி​யாக இது அமைந்​தது. 5 ஆட்​டங்​களில் விளை​யாடி உள்ள அந்த அணி ஒரு வெற்​றி, 4 தோல்வி​களு​டன் 2 புள்​ளி​கள் பெற்று பட்​டியலில் 9-வது இடத்​தில் உள்​ளது. பஞ்​சாப் அணிக்கு எதி​ரான ஆட்​டத்​தில் 220 ரன்​கள் இலக்கை துரத்​திய சிஎஸ்கே அணி 20 ஓவர்​களில் 5 விக்​கெட்​கள்…

விடுதலைப்புலிகள் முன்னாள் போராளி பிள்ளையான் கைது – இலங்கையில் நடப்பது என்ன?

படக்குறிப்பு, 8 ஏப்ரல் 2025புதுப்பிக்கப்பட்டது 8 மணி நேரங்களுக்கு முன்னர்தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளியும், இலங்கையின் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் நேற்று (ஏப்ரல் 8) கைது செய்யப்பட்ட நிலையில், அவரை 72 மணி நேரம் தடுத்து வைக்க போலீஸாருக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. மட்டக்களப்பு பகுதியிலுள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைமை அலுவலகத்தில் வைத்து இன்றிரவு (ஏப்ரல் 8) போலீஸாரினால் பிள்ளையான் கைது செய்யப்பட்டுள்ளார்.இந்த கைது…

1 252 253 254 255 256 355