கேரளாவில் ரசாயனங்களுடன் கவிழ்ந்த கப்பல் – அரபிக்கடல் ஆபத்து தமிழ்நாட்டை நெருங்குமா?
பட மூலாதாரம், X/@indiacoastguardகட்டுரை தகவல்அரபிக் கடலில் கேரள கரையருகே 640 கண்டெய்னர்களை கொண்ட சரக்குக் கப்பல் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. கப்பலிலிருந்து 24 பேரும் மீட்கப்பட்டனர் என்றாலும், அதிலிருந்த ஆபத்தான சரக்குகள், ரசாயனங்கள், 84 டன் எண்ணெய் ஆகியவை கசிந்து பெரும் சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று அச்சம் எழுந்துள்ளது.கசியும் எண்ணெய் அளவு அதிகமாக இருந்தால் அதன் பாதிப்பு தமிழக கரையை எட்டக்கூடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். என்ன நடந்தது?மே 23, 2025- கேரளாவின் விழிஞ்சம் துறைமுகத்திலிருந்து…









