இந்தியாவில் மிக அதிக காற்று மாசு இருந்தாலும் உச்ச வரம்பை 500ஆக அரசு நிர்ணயித்திருப்பது ஏன்?
பட மூலாதாரம், Hindustan Times via Getty Imagesபடக்குறிப்பு, இந்தியாவின் காற்று தர குறியீடு (AQI) தனியார் மானிட்டர்களில் 500-ஐ விட மிகவும் அதிகமாக இருக்கலாம்11 நிமிடங்களுக்கு முன்னர்வட இந்தியாவில் வாழும் லட்சக்கணக்கான மக்களுக்கு, நவம்பர் மாத காற்று சாம்பல் வாசம் கொண்டதாக இருக்கும், வானம் புகைமூட்டமாகவே தெரியும், வெளியே செல்வதே ஒரு பெரும் சவாலாக இருக்கும்.காற்று எவ்வளவு மோசமாக இருக்கிறது என்பதை பரிசோதிப்பதில் இருந்தே பலரின் நாளும் தொடங்குகிறது. ஆனால், அவர்கள் என்ன பார்க்கிறார்கள் என்பது…









