Daily Archives: October 15, 2025

மதுரை: மேயர் இந்திராணி ராஜினாமா! | Madurai Arrests continue; Will Madurai Mayor resign?

மதுரை மாநாகராட்சியில் பல கோடி ரூபாய் வரி முறைகேடு நடந்ததாக குற்றம்சாட்டப்பட்டது. அதன் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசரணையை தொடங்கியது. இந்த வழக்கில் மாநகராட்சி பில் கலெக்டர், வருவாய் உதவியாளர், முன்னாள் உதவி கமிஷனர் என 13 பேர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டு உள்ளனர். பலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.மதுரை மேயர் இந்திராணி5 மண்டலத் தலைவர்கள், நிலைக்குழு தலைவர்கள் என 7 பேர் ராஜினாமா செய்திருக்கின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக அதிமுக…

பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்க மறுக்கும் இந்திய கிரிக்கெட் வீரர்கள்! | Cricket Turns Political: Indian Team Avoids Handshake with Pakistan Players!

மைதானத்தில் நடந்ததை மைதானத்தோடு விட்டுவிடுவோம். இந்த பவுண்டரி லைனை கடந்துவிட்டால் நீயும் நானும் சகோதரன், நமக்குள் எந்த வெறுப்பும் கிடையாது என்பதுதான் அந்த கைகுலுக்கலுக்கான அடையாளம். மைதானத்தின் உள் நடக்கும் சண்டைகள் வெளியில் சென்ற பிறகு நீடிக்கக்கூடாது என்பது விளையாட்டின் அடிப்படை அறம். ஆனால், இப்போதோ மைதானத்துக்கு வெளியே இருக்கும் சண்டைகளும் அரசியலும் கூட மைதானத்துக்குள் தேவையில்லாத தாக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கிவிட்டன.கைகுலுக்கலின் உன்னதத்தையும் அர்த்தத்தையும் கம்பீரும் அறிவார். ஏனெனில், அவர் வீரராக இருந்தபோது அவரும் பலருடனும் சண்டையிட்டு,…

கரூர் நெரிசல் குறித்து தமிழ்நாடு சட்டமன்றத்தில் விவாதிக்கப்பட்டது என்ன? முழு விவரம்

பட மூலாதாரம், Tamilnadu Assemblyகட்டுரை தகவல்கரூரில் நடந்த தமிழக வெற்றிக் கழக கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசல் சம்பவம் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று விளக்கமளித்தார். ஆனால், தாங்கள் கேள்விகளை எழுப்புவதற்கு முன்பாகவே முதலமைச்சர் பதில் சொல்வதாகக் கூறி எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி கண்டனம் தெரிவித்தார். பிறகு, அ.தி.மு.க. வெளிநடப்புச் செய்தது.கரூரில் கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசல் சம்பவம் குறித்து விவாதிப்பதற்காக…

கில்லிடம் கேப்டன்சியைக் கொடுத்ததன் மூலம் அவருக்குச் சாதகமாக யாரும் செயல்படவில்லை – கம்பீர் | No one acted in Gill favour by giving him the captaincy – Gambhir

ஷுப்மன் கில் கேப்டன்சி நல்ல தொடக்கம் கண்டுள்ளதாக கம்பீர் பாராட்டியுள்ளார். இங்கிலாந்தில் 2-2 என்று தொடரைச் சமன் செய்தது, இப்போது மே.இ.தீவுகளை 2-0 என்று வீழ்த்தியது ஆகியவை நல்ல தொடக்கம் என்கிறார் கம்பீர். மேலும் ஷுப்மன் கில்லிடம் கேப்டன்சியை கொடுத்ததன் மூலம் அவருக்குச் சாதகமாக யாரும் செயல்படவில்லை என்றார். உண்மையில் பயிற்சியாளராக இருப்பதால் இங்கிலாந்தில் 2-2 என்று டிரா செய்ததை அவர் விதந்தோதுகிறார், இதே வேறு பயிற்சியாளராக இருந்து இதே 2-2 டிரா செய்திருந்தால் தொடரை வென்றிருக்க…

“ரஞ்சிப் போட்டிகளில் விளையாடினால் 50 ஓவர் கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாட முடியும்” – கிரிக்கெட் வீரர் முகமது ஷமி | “If you play Ranji, you can play 50-over cricket” – Cricketer Mohammed Shami

இதேபோல் உடல் தகுதி குறித்து அப்டேட்டை அஜித் அகர்கருக்குக் கொடுப்பது என்னுடைய வேலை கிடையாது. இது தேசிய கிரிக்கெட் அகாடமியில் உள்ள நிர்வாகிகள், மருத்துவர்கள் கொடுக்க வேண்டும். அதை அவர்கள்தான் செய்ய வேண்டும் தவிர, அது என்னுடைய பிரச்னை கிடையாது. நான் எப்போதும் சொல்வது ஒன்றே ஒன்றுதான். எப்போதும் அணிக்காகச் சிறந்த வீரர்களைத் தேர்வு செய்யுங்கள்.அஜித் அகர்கர் (இந்திய அணி தேர்வு குழு தலைவர்)நான் தொடர்ந்து களத்தில் போராடுவேன். தொடர்ந்து போட்டிகளில் விளையாடுவேன்.நான் களத்தில் நன்றாக விளையாடினால்…

‘Ajith Kumar Racing’ அணி இதுவரை பங்கேற்ற போட்டிகளும், அதன் சாதனைகளும் | Ajith Kumar racing experience and learnings

பல சர்வதேச தொடர்ச்சியான ரேஸிங் தொடர்களில் முழுமையாக பங்கேற்ற முதல் இந்திய அணி, சர்வதேச போடியம் வெற்றி, மற்றும் உலக தரத்திலான திட்டமிடல் மற்றும் குழு ஒருங்கிணைப்பு அனுபவம். இந்தப் பயணத்துக்கு துணை நின்ற ஒவ்வொருவருக்கும் இதயபூர்வ நன்றியைத் தெரிவிக்கிறது:Series Organisers: Creventic, Prospeed, SRO சிறந்த ஒருங்கிணைப்பு மற்றும் ஆதரவுக்காக.Partner Teams: Redant Racing, AV Racing – தொழில்நுட்ப ஒத்துழைப்புக்காக.Team Members: புதியவர்களும் பழையவர்களும் — உழைப்புக்காக.Fans & Supporters: ஒவ்வொரு ரேஸிலும், ஒவ்வொரு…

பிகாரில் நிதிஷ் குமார் கட்சிக்கும் பாஜகவுக்கும் சமமாக 101 இடங்கள் ஒதுக்கப்பட்டதால் என்ன சலசலப்பு?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, 2025 சட்டமன்ற தேர்தலில் ஜேடியு மற்றும் பாஜக இரு கட்சிகளும் தலா 101 இடங்களில் போட்டியிடுகிறது.கட்டுரை தகவல்எழுதியவர், சிடு திவாரிபதவி, பிபிசி செய்தியாளர் 14 அக்டோபர் 2025புதுப்பிக்கப்பட்டது 8 மணி நேரங்களுக்கு முன்னர்ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) 2005-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஆட்சிக்கு வந்ததிலிருந்து, தொகுதி பங்கீட்டில் அக்கட்சி முக்கிய பங்கை வகிக்காதது இதுவே முதன்முறை.பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில்(என்டிஏ) 2020 சட்டமன்ற தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் 115…

“அவர்களின் அனுபவம் எங்களுக்கு கைகொடுக்கும்” – ரோஹித், கோலி குறித்து கம்பீர் கருத்து | their experience was handful for us in australia gambhir on kohli rohit return

புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ளது. இதில் ஒருநாள் தொடரில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன்கள் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் விளையாட உள்ளனர். இது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏனெனில் டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து இருவரும் ஓய்வு பெற்றுவிட்டனர். இந்தச் சூழலில் அவர்களது அனுபவம் குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம்…

காஸா போர் நிறுத்தம்: இந்த நாடுகளின் பங்களிப்பு பற்றி தெரியுமா? | Not only Trump these countries also played an important role in ending the war in Gaza

2. பிரான்ஸ்:ஐரோப்பாவில் பிரான்ஸின் பேச்சுக்கு பெரும் செல்வாக்கு இருக்கிறது. அவர்கள் எடுக்கும் முடிவு, அவர்கள் வைக்கும் கருத்து அரசியலில் தாக்கம் ஏற்படுத்தக் கூடியதாக இருக்கிறது. அந்த அடிப்படையில் பிரான்ஸின் தலையீடு காஸாவில் போரை முடிவுக்கு கொண்டு வர ஒரு முக்கிய காரணமாக இருந்திருக்கிறது. ஹமாஸின் 2023 அக்டோபர் 7 தாக்குதலை பிரான்ஸ் கண்டித்திருந்தது. இன்னும் சொல்லப்போனால், பிரான்ஸைச் சேர்ந்தவர்களும் அந்தத்  தாக்குதலில் உயிரிழந்திருந்தனர். முதலில் இஸ்ரேலுக்கு ஆதரவாக பிரான்ஸ் இருந்தாலும், ஒரு கட்டத்துக்கு மேல் இஸ்ரேல் காஸாவில் நிகழ்த்திய அட்டூழியங்கள் ஏற்புடையதல்ல…

ஹாக்கி போட்டியில் இந்தியா பாகிஸ்தான் வீரர்கள் Hi-Fi; இணையத்தில் வைரலாகும் வீடியோ | India, Pakistan players play Hi-Fi in hockey match; Video goes viral on internet

அதன் நீட்சியாக, நடப்பு மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை தொடரிலும் லீக் சுற்றில் பாகிஸ்தான் வீராங்கனைகளுடன் இந்திய வீராங்கனைகள் கைகுலுக்க மறுத்தனர்.இவ்வாறு, விளையாட்டிலும் இருநாட்டுக்கிடையிலான அரசியல் புகுத்தப்பட்டிருக்கும் நிலையில், ஹாக்கி போட்டியொன்றில் இருநாட்டு வீரர்களும் ஒருவரையொருவர் High-Five செய்து கொண்ட செயல் வைரலாகி வருகிறது.மலேசியாவில் நடைபெற்றுவரும் 21 வயத்துக்குட்பட்டோருக்கான சுல்தான் ஆஃப் ஜோகூர் கோப்பை ஹாக்கி தொடரில், ஜோகூர் பாருவில் (Johor Bahru) இன்று இந்தியாவும் பாகிஸ்தானும் மோதின.போட்டி ஆரம்பிக்கும்போது இரு அணி வீரர்களும் ஒருவரையொருவர் Hi-Fi…