Daily Archives: September 18, 2025

மயிலாடுதுறை: காதல் விவகாரத்தில் தலித் இளைஞர் கொலைச் சம்பவத்தின் பின்னணி என்ன?

படக்குறிப்பு, வைரமுத்துகட்டுரை தகவல்காதல் விவகாரத்தில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக வைரமுத்து என்ற தலித் இளைஞர் கொல்லப்பட்டதாக, செப்டெம்பர் 17 அன்று மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.ஒரே சாதியை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்வதற்கு முடிவெடுத்ததால் பட்டியல் சாதி இளைஞர் கொல்லப்பட்டாரா? பின்னணி என்ன?மயிலாடுதுறை மாவட்டம், அடியமங்கலம் கிராமத்தில் பெரிய தெருவில் வசித்து வரும் குமார் என்பவரின் மகன் வைரமுத்துவும் அதே பகுதியைச் சேர்ந்த 26 வயதான பெண்ணும் காதலித்து வந்துள்ளனர்.டிப்ளமோ படித்துள்ள வைரமுத்து,…

“2017 ஆம் ஆண்டு நான் ஓய்வு பெற்றப் பிறகு என் வாழ்க்கை முறையே மாறிவிட்டது”- உசைன் போல்ட் |usain-bolt-life-changed-after-retirement-in-2017

ஒலிம்பிக் தடகளப்போட்டிகளில் சாதனைப் படைத்த உசைன் போல்ட் தற்போது படிக்கட்டுகளில் ஏறி இறங்குவதற்கு சிரமமாக இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார். ஜமைக்கா நாட்டை சேர்ந்த தடகள வீரர் உசைன் போல்ட். 100 மீட்டர் ஓட்டத்தில் உலக சாதனைப் படைத்துள்ள இவர், ஒலிம்பிக் போட்டிகளில் மட்டும் 8 தங்கம் வென்று உலக சாதனை படைத்திருக்கிறார். உசைன் போல்ட் 100 மீட்டரை வெறும் 9.58 நொடிகளில் கடந்து அசத்தியிருக்கிறார். “மின்னல் வேக மனிதன்’ என்று அழைக்கப்பட்ட உசைன் போல்ட் 2017ல் சர்வதேச…

SSVM டிரான்ஸ்ஃபார்மிங் இந்தியா கான்க்ளேவ் மாநாடு கருத்தரங்குகள். கலாச்சார நிகழ்வுகள்.உயரிய விருதுகள்

இந்திய AI வேண்டுகோள்திரு. ஜிபு எலியாஸ் (AI நெறிமுறையாளர் மற்றும் ஆராய்ச்சியாளர்): “தற்போது AI மொழி மற்றும் கலாச்சார குறைபாடுகளைக் கொண்டுள்ளது. இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் மரபுகளைப் பிரதிபலிக்கும் ஒரு இந்திய AI-ஐ உருவாக்க வேண்டும்” என்றார்.  விளையாட்டுகளில் AIதிரு. பிரகாஷ் படுகோன் (முன்னாள் இந்திய பேட்மிண்டன் வீரர்): “விளையாட்டு வீரர்களுக்கான பயிற்சி, வீடியோ பகுப்பாய்வு, ஊட்டச்சத்து திட்டமிடல் போன்ற அம்சங்களில் AI பெரிதும் உதவக்கூடும். ஆனால், அதைப் பயன்படுத்தி மனிதர்கள்தான் விளையாட்டுப் போட்டிகளில் வெல்ல வேண்டும்” என்றார். மாணவர் தொழில்முனைவோர் விருதுகள்…

பாகிஸ்தான் கேப்டன், மேனேஜரிடம் மன்னிப்பு கேட்ட ஐசிசி மேட்ச் ரெஃப்ரீ பைகிராஃப்ட்! | ICC match referee Andy Pycroft apologizes to Pakistan captain and manager

ஆசியக் கோப்பையின் சர்ச்சை நாயகனான ஜிம்பாப்வே முன்னாள் வீரரும் ஆசியக் கோப்பை ஐசிசி ஆட்ட நடுவருமான ஆண்டி பைகிராப்ட் பாகிஸ்தான் கேப்டன் சல்மான் ஆகா மற்றும் மேனேஜரிடம் மன்னிப்புக் கேட்டதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. சர்ச்சைகளை கிளப்பிய கைகுலுக்கல் விவகார இந்தியா – பாகிஸ்தான் மேட்சில் ஆட்ட நடுவராக இருந்தவர் ஆண்டி பைகிராஃப்ட். நேற்று யுஏஇ அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் களமிறங்குவதில் தாமதம் ஏற்பட்டது, ஆட்ட நடுவர் ஆண்டி பைகிராப்ட்டை…

இந்தியாவின் செயலுக்காக பாகிஸ்தானிடம் மன்னிப்பு கேட்ட நடுவர்?; யுஏஇ-க்கு எதிரான போட்டி தாமதமாக காரணம் என்ன?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, ஆண்டி பைக்ராஃப்ட் மன்னிப்பு கேட்டதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கூறுகிறது15 நிமிடங்களுக்கு முன்னர்பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் மேலாளர் மற்றும் கேப்டனிடம் ஐசிசி (இந்திய கிரிக்கெட் கவுன்சில்) போட்டி நடுவர் ஆண்டி பைகிராஃப்ட் மன்னிப்பு கேட்டதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) கூறியதாக பிபிசி உருது செய்தி வெளியிட்டுள்ளது. இருப்பினும், ஐசிசி இதுவரை இது குறித்து எந்த செய்தியும் குறிப்பிடவில்லை.ஞாயிற்றுக்கிழமை இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது, இரு அணிகளின்…

சீனா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன்: கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு சாட்விக்-ஷிராக் ஜோடி முன்னேற்றம் | china masters badminton satwik chirag in round of 16

ஷென்சென்: சீனாவின் ஷென்சென் நகரில் சீனா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் இந்தியாவின் லக் ஷயா சென் 11-21, 10-21 என்ற செட் கணக்கில் பிரான்ஸின் தோமா ஜூனியர் போபோவிடம் தோல்வி அடைந்தார். ஆடவர் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் சாட்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி, ஷிராக் ஷெட்டி ஜோடி 24-22, 21-13 என்ற நேர் செட் கணக்கில் மலேசியாவின் ஜூனைடி ஆரிஃப், ராய் கிங் யாப்…

மேட்ச் ரெப்ஃரீயை நீக்க ஐசிசி மறுப்பு: கடைசி நேரம் வரை மைதானத்துக்கு வரமறுத்த பாகிஸ்தான் அணி | ICC refuses to remove match referee Pakistan arrived late to stadium asia cup

துபாய்: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் கடந்த ஞாயிற்றுக்கிழமை துபாயில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. இந்த போட்டியில் டாஸின் போதும், போட்டி நிறைவடைந்த பிறகும் இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் சக அணி வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கை குலுக்கவில்லை. மேலும் டாஸ் நிகழ்வின் போது விளையாடும்…

டியல்லா: உலகின் முதல் செயற்கை நுண்ணறிவு அமைச்சர் செய்யப்போகும் முக்கிய பணி என்ன?

பட மூலாதாரம், ADNAN BECI/AFPபடக்குறிப்பு, புதிய ஏஐ அமைச்சர் டியல்லா நீண்ட காலமாகவே பல்வேறு வேலைகளைச் செய்து வருகிறார்.கட்டுரை தகவல்அரசாங்க அதிகாரிகள் “இதயமற்றவர்கள்” என்ற அவமதிப்பை அடிக்கடி எதிர்கொள்வார்கள். ஆனால் அல்பேனியா இந்த அவமதிப்பை ஒரு ஏஐ (செயற்கை நுண்ணறிவு) அமைச்சரை நியமிப்பதன் மூலம் இந்த நேர்மறையான விஷயமாக மாற்றியுள்ளது.ஏஐ-க்கான அமைச்சர் அல்ல, மாறாக முழுக்க முழுக்க ஏஐ-யால் மட்டுமே உருவாக்கப்பட்ட ஒரு அமைச்சர். இந்த புதிய அமைச்சரின் பெயர் டியல்லா.மே மாதம் நடைபெற்ற தேர்தலில் வெற்றி…

IND vs PAK : `சில மூன்றாம் தரப்பினர் கூச்சல்களுக்கு கவனம் செலுத்துவதை விட வெற்றியைக் கொண்டாடுவோம்’ – பிசிசிஐ செயலாளர் | BCCI Secretary says celebrate the victory of india

ஆசியக் கோப்பையில் பாகிஸ்தானுக்கெதிரான போட்டியில் (செப்டம்பர் 14) வெற்றிபெற்ற பிறகு இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களிடம் கைகுலுக்காமல் சென்ற விவகாரம் பெரும் விவாதத்தைத் தூண்டியது.ஒருபக்கம் பாகிஸ்தான் பயிற்சியாளர், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர், முன்னாள் மற்றும் தற்போதைய வீரர்கள் எனப் பலரும் அதிருப்தியில் இருக்க, மறுபக்கம் இந்திய அணி வீரர்கள், பிசிசிஐ-யைச் சேர்ந்தவர்கள் எதிரணியிடம் கைகுலுக்க வேண்டும் எனச் சட்டம் ஒன்றும் இல்லை என்கிற தொனியில் பேசிவருகின்றனர்.இதற்கிடையில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலோ, ஆசிய கிரிக்கெட் கவுன்சிலோ இதில்…