Daily Archives: September 4, 2025

பிரதமர் மோடிக்கு சாக்லேட் சிற்பம் – எதற்காக தெரியுமா?

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளை ( செப்டம்பர் 17) முன்னிட்டு ஒடிசாவை சேர்ந்த மாணவர்கள் அவரது உருவத்தை சாக்லேட்டில் வடிவமைத்து அசத்தியுள்ளனர். இதற்காக இவர்கள் 55 கிலோ டார்க் சாக்லேட் மற்றும் 15 கிலோ ஒயிட் சாக்லேட் பயன்படுத்தியுள்ளனர். புவனேஸ்வரில் உள்ள கிளப் சாக்லேட் என்ற தொழில் முறை பேக்கிங் மற்றும் பேஸ்ட்ரி பயிற்சி நிறுவனத்தை சேர்ந்த டிப்ளமோ மாணவர்கள் இந்த சாக்லேட் சிற்பத்தை உருவாக்கியுள்ளனர்.முழுக்க முழுக்க இது சாக்லேட்டால் மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ராகேஷ்…

IPL-ல் 3 முறை ஹாட்ரிக் விக்கெட் எடுத்த ஒரே வீரர்; 25 வருட கரியரை முடித்துக் கொண்ட இந்திய சாம்பியன்!

ஐபிஎல்-லில் மூன்று முறை ஹாட்ரிக் விக்கெட் எடுத்த ஒரே வீரரான அமித் மிஸ்ரா, அனைத்து விதமான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வை அறிவித்திருக்கிறார்.சுழற்பந்துவீச்சாளரான இவர் 2003-ல் வங்காளதேசம், தென்னாப்பிரிக்கா, இந்தியா ஆகிய நாடுகள் பங்கேற்ற முத்தரப்பு தொடரில் (50 ஓவர்) தென்னாப்பிரிக்காவுக்கெதிரான போட்டியின் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார்.அதற்கு 5 ஆண்டுகள் கழித்து 2008-ல் ஆஸ்திரேலியாவுக்கெதிரான போட்டியின் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டிலும், அடுத்து 2010-ல் ஜிம்பாப்வேவுக்கெதிரான போட்டியின் மூலம் டி20 கிரிக்கெட்டிலும் அறிமுகமானார்.அமித் மிஸ்ரா (Amit Mishra)மூன்று ஃபார்மெட்டுகளையும் சேர்த்து…

ரஷ்யா-பாகிஸ்தான் தலைவர்கள் சந்திப்பு – இந்தியாவுக்கு என்ன கவலை?

பட மூலாதாரம், @CMShehbazபடக்குறிப்பு, செவ்வாய்க்கிழமை சீனாவில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் மற்றும் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் இடையே இருதரப்பு சந்திப்பு நடைபெற்றது.கட்டுரை தகவல்எழுதியவர், ரஜ்னீஷ் குமார்பதவி, பிபிசி செய்தியாளர்4 செப்டெம்பர் 2025, 09:41 GMTபுதுப்பிக்கப்பட்டது 26 நிமிடங்களுக்கு முன்னர்சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் செயலாளராக இருந்த நிகிதா எஸ். குருஷ்சேவ் 1955-ல் ஸ்ரீநகருக்கு வந்தார். அப்போதைய ஜம்மு-காஷ்மீர் பட்டத்து இளவரசர் கரண் சிங் அவரை அழைத்திருந்தார்.இந்த பயணத்தின் போது, நிகிதா குருஷ்சேவ், பாகிஸ்தான் தன்னையும்…

வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்தாலோ, அளவுக்கு அதிகமாக குடித்தாலோ வாந்தி உணர்வு ஏற்படுகிறது. -தீர்வு என்ன?

போதுமான அளவு தண்ணீர் குடிக்காதபோது நாக்கு வறண்டு போகும், உதடுகள் வெடிக்கும், இதயத் துடிப்பு அதிகரிக்கும், சிறுநீர் அடர் மஞ்சள் நிறத்தில் வெளியேறும்.எனவே, தாகம் எடுக்கும்போது மட்டும் தண்ணீர் குடிப்பதைவிட, குறிப்பிட்ட இடைவெளியில் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் குடிப்பது நல்லது.நீங்கள் குறிப்பிட்டதுபோல, வெறும் தண்ணீர் குடிப்பது சிலருக்கு குமட்டல், வாந்தி உணர்வை ஏற்படுத்தலாம். அப்படிப்பட்டவர்கள், தண்ணீரில் சிறிது எலுமிச்சைச் சாறு கலந்து, புதினா இலைகளுடன் குடிக்கலாம்.நீர்வறட்சி ஏற்படாமல் இருக்க வெறும் தண்ணீர்தான் குடிக்க வேண்டும் என்றில்லை. கொழுப்பு…

முத்தரப்பு டி 20 தொடரில் பாகிஸ்தானை வீழ்த்தியது ஆப்கானிஸ்தான் | Afghanistan beat Pakistan

முத்தரப்பு டி 20 கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணியை 18 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆப்கானிஸ்தான் அணி. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் முத்தரப்பு டி 20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் 20 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்தது. செதிகுல்லா அடல் 45 பந்துகளில், 3 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் 64 ரன்களும்,…

GST: “வரலாறு காணாத வரிக் குறைப்பு; தீபாவளி பரிசு'' – நயினார் நாகேந்திரன், எல்.முருகன் பாராட்டு

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று (புதன்கிழமை) இரவு சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) தொடர்பாக பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இரண்டு அடுக்கு ஜிஎஸ்டி விகித முறை ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி வரிவிகித மாற்றத்தின்படி, தற்போதுள்ள 5%, 12%, 18%, 28% ஆகிய நான்கு வரி அடுக்குகள் 5% மற்றும் 18% என இரண்டு அடுக்குகளாக குறைக்கப்பட்டுள்ளன.இந்த அறிவிப்பை வெளியிட்ட நிர்மலா சீதாராமன், வரும் 22-ம் தேதி முதல் 5% மற்றும்…

புச்சிபாபு கிரிக்கெட் தொடர்: இறுதிப் போட்டிக்கு டிஎன்சிஏ முன்னேற்றம் | Buchi Babu Trophy 2025

சென்னை: புச்​சி​பாபு கிரிக்​கெட் தொடரின் டிஎன்​சிஏ பிரெஸிடெண்ட் லெவன் – ஜம்மு & காஷ்மீர் அணி​கள் இடையி​லான அரை இறுதி ஆட்​டம் சென்​னை​யில் உள்ள சிஎஸ்கே உயர் செயல் திறன் மையத்​தில் நடை​பெற்று வந்​தது. இதில் டிஎன்​சிஏ பிரெஸிடெண்ட் லெவன் முதல் இன்​னிங்​ஸில் 9 விக்​கெட்​கள் இழப்​புக்கு 567 ரன்​கள் குவித்து டிக்​ளேர் செய்​தது. இதையடுத்து விளை​யாடிய ஜம்மு & காஷ்மீர் அணி 3-வது நாள் ஆட்​டத்​தின் முடி​வில் 65 ஓவர்​களில் 4 விக்​கெட்​கள் இழப்​புக்கு 212…

சென்னை: தங்க நகைகளுக்கு பதில் கவரிங் நகைகள் – சுங்கத்துறை அதிகாரிகள் சிக்கியது எப்படி?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, சித்தரிப்புப் படம்கட்டுரை தகவல்இந்திய அரசின் வரிச் சலுகைகளைப் பெறுவதற்காக போலி தங்க நகைகளை ஏற்றுமதி செய்து மோசடி செய்ததாக, சுங்கத்துறை அதிகாரிகள் 4 பேர் உட்பட 9 பேர் மீது ஆகஸ்ட் 20 அன்று சி.பி.ஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.போலி தங்க நகைகள் மூலம் 2020 முதல் 2022 ஆம் ஆண்டு வரை சுமார் 900 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்திருப்பதாக சுங்கத்துறையின் ஊழல் கண்காணிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.போலி தங்க நகைகளைக்…

Bhuvneshwar Kumar; BCCi; தொடர்ந்து நன்றாக கிரிக்கெட் விளையாடினால் அவர்களை நீண்ட காலத்திற்குப் புறக்கணிக்க என்று புவனேஷ்வர் குமார் கூறியிருக்கிறார்

அந்த நேர்காணலில், மீண்டும் தங்களை இந்திய அணியில் பார்க்க முடியுமா என்ற கேள்விக்கு, “தேர்வுக் குழுவினர் மட்டுமே அதற்குப் பதிலளிக்க முடியும்” என்று பதிலளித்த புவனேஷ்வர் குமார், “களத்தில் என்னுடைய 100 சதவிகித உழைப்பையும் கொடுப்பதே என் வேலை.உத்தரப்பிரதேச லீக்கிற்குப் பிறகு சையது முஷ்டாக் அலி, ரஞ்சி அல்லது ஒருநாள் ஃபார்மெட்டுகளில் உத்தரப்பிரதேச அணிக்காக விளையாட வாய்ப்பு கிடைத்தால், அங்கும் என்னால் முடிந்த அனைத்தையும் வழங்குவேன்.ஒரு ஒழுக்கமான பந்து வீச்சாளராக, எனது கவனம் முழுவதும் ஃபிட்னஸ் மற்றும்…

இனி 5% மற்றும் 18% என மட்டுமே ஜிஎஸ்டி வரி அடுக்குகள் இருக்கும்

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 56-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் தொடங்கி நடைபெற்றது. இதில், அனைத்து மாநிலங்களின் நிதி அமைச்சர்கள் பங்கேற்றனர். தமிழ்நாடு சார்பில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பங்கேற்றார்.இந்த கூட்டத்தில் 2 அடுக்குகளாக ஜிஎஸ்டி வரி வரம்பை குறைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். அதன்படி இனி 5% மற்றும் 18% என மட்டுமே ஜிஎஸ்டி வரி அடுக்குகள் இருக்கும் என அவர் தெரிவித்தார். அதேநேரத்தில் சிறப்பு…