Daily Archives: July 1, 2025

வேலூர்: கோட்டையில் செல்போன் பறிப்பு; எஸ்கேப்பாக அகழியில் குதித்த இளைஞர்- காப்பாற்றி கைதுசெய்த போலீஸ் | police caught a youth who involved in theft at vellore fort

வேலூர் என்று சொன்னாலே சட்டென நினைவுக்கு வருவது வேலூர் கோட்டை தான். வேலூர் கோட்டைக்கு தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். அந்த வகையில் நேற்று வேலூர் கோட்டையை சுற்றி பார்க்க வந்த வட மாநிலத்தை சேர்ந்த சுற்றலா பயணி ஒருவரிடம் செல்போனை பறித்துக்கொண்டு தப்பிக்க முயன்றுள்ளார் வேலூரை சேர்ந்த ‘கோழி கோபி’ என்ற இளைஞர். சுற்றுலா பயணியின் செல்போனை பறித்து கொண்டு அவர் ஓட்டம் பிடித்தபோது, அவரை உள்ளூர் பொது மக்கள் சிலர்…

CSK : 'சென்னை அணியில் சஞ்சு சாம்சனா?' – ஐ.பி.எல் இன் டிரேட் விதிகள் சொல்வதென்ன?

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டிரேட் முறையில் தங்கள் அணிக்கு வாங்கவிருப்பதாக ஒரு தகவல் சமூக வலைதளங்களில் உலாவிக் கொண்டிருக்கிறது. சென்னை அணியால் சாம்சனை வாங்க முடியுமா? ஐ.பி.எல் இன் டிரேட் விதிகள் சொல்வதென்ன?Samsonசென்னை அணி அஷ்வினை கொடுத்துவிட்டு ராஜஸ்தான் அணியிடமிருந்து சாம்சனை வாங்குவதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்துகொண்டிருப்பதாக சில நாட்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் பலரும் பதிவிட்டு வந்தனர். இதன்பிறகு இந்த ட்ரேட் செய்தி பெரும் பேசு பொருளானது.சமீபத்தில்…

திருப்புவனம் கோவில் காவலாளி வழக்கு: 5 காவல்துறையினர் கைது – உயர் நீதிமன்றத்தில் என்ன நடந்தது?

பட மூலாதாரம், SCREENGRABபடக்குறிப்பு, உயர் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் காட்டப்பட்ட வீடியோவில் ஒரு காட்சி(இடது) உயிரிழந்த காவலாளி அஜித் குமார் (வலது)கட்டுரை தகவல்எழுதியவர், பிரபுராவ் ஆனந்தன்பதவி, பிபிசி தமிழுக்காக 1 ஜூலை 2025, 05:04 GMTபுதுப்பிக்கப்பட்டது 8 நிமிடங்களுக்கு முன்னர்திருப்புவனம் கோவில் காவலாளி அஜித்குமார் மரண வழக்கு அடுத்தடுத்து பூதாகரமாகி வருகிறது. கொலை வழக்காக மாற்றப்பட்டு 5 காவலர்கள் கைது செய்யப்பட்டுவிட்ட நிலையில், அஜித்குமாரை காவல்துறையினர் தாக்கிய போது எடுக்கப்பட்டது என்று உயர் நீதிமன்ற மதுரை கிளையில்…

‘இந்தியாவில் டெஸ்ட் தொடரை வெல்ல வேண்டும்’ – நேதன் லயன் ஆசை! | australian spinner nathan lyon wants to win test series in india

செயின்ட் ஜார்ஜ்: இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்ல வேண்டும் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளரான நேதன் லயன் தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார். 37 வயதான அவர், ஆஸ்திரேலிய அணிக்காக 138 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 556 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார். இந்திய அணிக்கு எதிரான உள்நாடு மற்றும் வெளிநாடு என 32 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 130 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார். இருப்பினும் இந்திய மண்ணில் அவர் இடம்பெற்ற ஆஸ்திரேலிய அணி இதுவரை…

Doctor Vikatan: மருத்துவரைப் பார்க்கச் செல்லும்போதுஎகிறும் BP; கட்டுப்படுத்த முடியுமா?

Doctor Vikatan: என் அம்மாவுக்கு 60 வயதாகிறது. எப்போது எந்தப் பிரச்னைக்காக மருத்துவரைப் பார்க்கப் போனாலும் அவருக்கு BP அளவு தாறுமாறாக அதிகரிக்கிறது. மருத்துவர் BP பார்த்துவிட்டு, குறைத்துவிட்டு வரும்படி திருப்பி அனுப்புகிறார். மற்ற நேரங்களில் அம்மாவுக்கு BP அளவு நார்மலாகவே இருக்கிறது. இதை எப்படிப் புரிந்துகொள்வது, இதற்கு சிகிச்சை தேவையா?பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த நீரிழிவு மற்றும் பச்சிளம் குழந்தைகளுக்கான மருத்துவர் சஃபி. குழந்தைகள் நலம் மற்றும் நீரிழிவு மருத்துவர் சஃபி ஹைப்பர் டென்ஷன் எனப்படும் உயர் ரத்த அழுத்தத்தில் ‘எசென்ஷியல் ஹைப்பர்டென்ஷன்’ (Essential…

6 engines, 295 coaches, 3.5 km: 6 எஞ்சின்கள், 295 பெட்டிகள், 3.5 கி.மீ : உலகின் மிகப்பெரிய சரக்கு ரயில் `சூப்பர் வாசுகி’ தெரியுமா?

நாட்டில் ரயில் சேவை மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது. ரயில்களில் பண்டிகை காலத்தில் டிக்கெட் எடுப்பது என்பது சவாலான ஒன்றாக இருக்கிறது. இதனால் மக்கள் ஏஜென்டுகளின் துணையை நாடவேண்டிய நிலையில் இருக்கின்றனர். இதே போன்று நாட்டிற்குள் சரக்குகளை எடுத்துச்செல்லவும் சரக்கு ரயில்கள் முக்கியமான பங்கு வகிக்கிறது. `சூப்பர் வாசுகி’மகாராஷ்டிராவில் இயக்கப்படும் `சூப்பர் வாசுகி’ என்ற சரக்கு ரயில்தான் உலகிலேயே மிகப்பெரிய ரயிலாக கருதப்படுகிறது. நாட்டின் 75வது சுதந்திர தினத்தையொட்டி 2022-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மத்திய அரசு…

கால் இறுதி சுற்றில் நுழைந்தது பிஎஸ்ஜி! | fifa club world cup psg enters quarter finals

அட்லான்டா: கிளப்களுக்கு இடையிலான உலகக் கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று முன்தினம் இரவு அட்லான்டாவில் நடைபெற்ற கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் லயோனல் மெஸ்ஸியின் இன்டர் மியாமி அணி, பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணிகள் மோதின. இதில் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் (பிஎஸ்ஜி) அணி 4-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்று கால் இறுதிக்கு முன்னேறியது. அந்த அணி தரப்பில் ஜோவோ நெவ்ஸ் இரு கோல்களும் (6 மற்றும்…

திருப்புவனம் கோயில் காவலாளி வழக்கு: காவல்துறை விசாரணையில் என்ன நடந்தது? சகோதரர் அளித்த முழு விவரம்

படக்குறிப்பு, உயிரிழந்த காவலாளி அஜித் குமாரும், அவர் தாக்கப்பட்டதாக கூறப்படும் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் மாட்டுத் தொழுவமும்கட்டுரை தகவல்எழுதியவர், பிரபுராவ் ஆனந்தன்பதவி, பிபிசி தமிழுக்காக30 ஜூன் 2025புதுப்பிக்கப்பட்டது 48 நிமிடங்களுக்கு முன்னர்படக்குறிப்பு, உயிரிழந்த காவலாளி அஜித் குமார்திருப்புவனம் கோவில் காவலாளி அஜித்குமார் மரண வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஏற்கனவே சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்த 6 காவலர்களில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அஜித்குமார் தாக்கப்பட்டதாக கூறப்படும் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் மாட்டுத் தொழுவத்தில் நீதிபதி நேரில்…

badminton; ayush shetty; US Open; அமெரிக்க ஓபன் பேட்மிண்டன் சூப்பர் 300 தொடரில் இந்திய வீரர் ஆயுஷ் ஷெட்டி சாம்பியன் பட்டம் வென்றார்.

அதைத் தொடர்ந்து, இந்திய ஜூனியர் ஒற்றையர் தொடரில் முதலிடம் பிடித்தார். இப்போது, 2025-ம் ஆண்டு ஆயுஷ் ஷெட்டிக்கு சிறப்பாகத் தொடங்கியிருக்கிறது.இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஆர்லியன்ஸ் மாஸ்டர்ஸ் சூப்பர் 300 தொடரில் முன்னாள் உலக சாம்பியன்கள் லோ கீன் யூ மற்றும் ராஸ்மஸ் ஜெம்கே ஆகியோரைத் தோற்கடித்து அரையிறுதி வரை முன்னேறினார்.கடந்த மாதம் தைபே ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்தை வீழ்த்தி அரையிறுதிவரை முன்னேறினார்.தற்போது, அமெரிக்க ஓபனில் சாம்பியன் பட்டம் வென்றிருக்கிறார்.ஆயுஷ் ஷெட்டிபேட்மிண்டனில் 20…