Daily Archives: June 26, 2025

விழுப்புரம்: பள்ளிக் குழந்தைகளுக்கு பரிமாறப்பட்ட உணவில் பல்லி வால்! – மருத்துவர்கள் பரிசோதனை | Villupuram: Lizard’s tail in Chief Minister’s breakfast program!

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அருகே அமைந்துள்ள ஆணைவாரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் காலை உணவு திட்டத்தில் பல்லி விழுந்த சத்துணவை சாப்பிட்ட 52 மாணவ மாணவிகளிடம் மருத்துவர்கள் பரிசோதனை மேற்கொண்டர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அருகே ஆணைவாரி கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை 67…

‘நீ ஒன்றும் கர்ட்லீ ஆம்புரோஸ் அல்ல’ என சீண்டிய இயன் ஹீலி: வெகுண்டெழுந்த ஷமார் ஜோசப் | You are not Curtly Ambrose: Ian Healy sledges West Indies; Shamar Joseph responds

பிரிட்ஜ்டவுனில் நடைபெறும் ஆஸ்திரேலியா-மே.இ.தீவுகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் 14 விக்கெட்டுகள் சரிந்தன. ஆஸ்திரேலியா டாஸ் வென்று முதலில் பேட் செய்து 180 ரன்களுக்குச் சுருண்டது. ஷமார் ஜோசப் 4 விக்கேட்டுகலையும் ஜேய்டன் சீல்ஸ் 5 விக்கெட்டுகளையும் சாய்த்தனர். தொடர்ந்து ஆடிய மே.இ.தீவுகள் தன் முதல் இன்னிங்சில் ஆட்ட முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 57 ரன்கள் எடுத்துள்ளது. 180 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸில் சுருண்டது, ஆஸ்திரேலியாவின் 30 ஆண்டுகளில் எடுத்த ஆகக்…

இரானில் இப்போது என்ன நிலவரம்? அயதுல்லா அலி காமனெயி ஆட்சி சிக்கலில் உள்ளதா?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்இஸ்ரேலுடனான மோதலின்போது, இரானில் உள்ள ஒரு ரகசிய பதுங்கு குழியில் சுமார் இரண்டு வாரங்கள் தங்கியிருந்த பிறகு, 86 வயதான உச்ச தலைவர் அயதுல்லா அலி காமனெயி, இப்போது ஏற்பட்ட சண்டை நிறுத்தத்தைப் பயன்படுத்தி வெளியே வர விரும்பலாம்.இஸ்ரேலால் அவர் படுகொலை செய்யப்படலாம் என்ற அச்சத்தில், அவர் எங்கோ பதுங்கியிருக்கிறார் என்றும், யாருடனும் தொடர்பு கொள்ளாமல் மறைத்து வைக்கப்பட்டு இருப்பதாகவும் நம்பப்படுகிறது. அரசின் உயர் அதிகாரிகளுக்கே அவரை அணுக முடியாத நிலை…

Gill : இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் எந்தெந்த விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்?

3 உலக டெஸ்ட் சாம்பியன்ஷுப் சுழற்சி முடிந்துவிட்டது. இரண்டில் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்றிருந்தது. ஒன்றை கூட இந்திய அணி வெல்லவில்லை. வழிகாட்ட சீனியர்கள் பெரிதாக இல்லாத நிலையில் கில் டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வென்று கொடுத்தால் இந்திய கிரிக்கெட்டின் ஆகச்சிறந்த கேப்டன்களில் ஒருவராக வைத்து கொண்டாடப்படுவார்.கம்பீர் அணிக்குள் புகுத்த நினைக்கும் குணாதிசயம் குழப்பமானதாகவும் இருக்கிறது. இங்கிலாந்தை போல அட்டாக்கிங் கிரிக்கெட் ஆடுவதிலும் அவருக்கு நாட்டமிருக்கிறது. ஆஸ்திரேலியாவை போல மரபார்ந்த முறையில் கிரிக்கெட் ஆடவும் விருப்பமிருக்கிறது. ஒரே சமயத்தில்…

Vaccine: இந்தியாவில் 14.4 லட்சம் குழந்தைகள் தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லையா? -அதிர்ச்சி தரும் ஆய்வு!

2023-ம் ஆண்டு உலகம் முழுவதும் 15.7 கோடி ஜீரோ டோஸ் குழந்தைகள் இருந்திருக்கின்றனர். அவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் 8 நாடுகளிலேயே உள்ளனர்.அவை, நைஜீரியா, இந்தியா, காங்கோ ஜனநாயக குடியரசு, எத்தியோப்பியா, சோமாலியா, சூடான், இந்தோனேசியா மற்றும் பிரேசில்.இந்தியாவில் மட்டும் 14.4 லட்சம் குழந்தைகள் ஒரு தடுப்பூசிக்கூட போட்டுக்கொள்ளாமல் உள்ளனர். இதனால் இந்த பட்டியலில் நைஜீரியாவுக்குப் பிறகு இரண்டாம் இடம் பிடிக்கிறது நம் நாடு.கோவிட் 19 தாக்கம்கொரோனா வைரஸ் பரவல் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகளை வெகுவாக பாதித்தது.…

Tiruchendur temple திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கு: “நல்ல நேரத்தில் நடத்த வேண்டும்” – உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு

திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் ஜூலை 7-ம் தேதி குடமுழுக்கு நடைபெறவுள்ளது. இந்தக் குடமுழுக்கு காலை 6.15 மணி முதல் 6.50 மணிக்குள் நடத்தப்படும் எனத் திருக்கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.ஆனால், இதற்குப் பதிலாக மதியம் 12.05 முதல் 12.47 மணிக்குள் நடத்த வேண்டும் எனவும், இந்த நேரத்தில் தோஷங்கள் இல்லாத நல்ல முகூர்த்த நேரம் உள்ளது எனவும் அதனால் இந்த நேரத்தில் குடமுழுக்கினை நடத்திட வேண்டும் எனக் கோயில் விதாயகர்…

நீரஜ் சோப்ரா அசத்தல் முதல் ரிஷப் பந்த் முன்னேற்றம் வரை – செய்தித் துளிகள் | Sports News bits explained

> செக்குடியரசின் ஆஸ்ட்ராவா நகரில் நடைபெற்ற கோல்டன் ஸ்பைக் தடகள போட்டியில் ஆடவருக்கான ஈட்டி எறிதலில் இந்தியாவின் நட்சத்திர வீரரான நீரஜ் சோப்ரா 85.29 மீட்டர் தூரம் எறிந்து முதலிடம் பிடித்து பட்டம் வென்றார். > இலங்கை அணிக்கு எதிரான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் வங்கதேச அணி 71 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 220 ரன்கள் எடுத்தது. அதிகபசட்மாக ஷத்மான் இஸ்லாம் 46 ரன்கள் சேர்த்தார். > டிஎன்பிஎல்…

சைஃப்-உல்-அசாம்: அரபு போரில் இஸ்ரேலை திணறவைத்த பாகிஸ்தான் விமானி

பட மூலாதாரம், social mediaபடக்குறிப்பு, பாகிஸ்தான் விமானப்படையைச் சேர்ந்த விமானி லெப்டினன்ட் சைஃப்-உல்-அசாம்கட்டுரை தகவல்1967 ஜூன் 5 ஆம் தேதி, வெப்பமும் தூசியும் நிறைந்த பிற்பகலில், ஜோர்டானின் சிறிய விமானப்படையை அழிக்கும் நோக்குடன் நான்கு இஸ்ரேலிய போர் விமானங்கள் மஃப்ராக் விமானப்படைத் தளத்தைத் தாக்கின.அதற்கு முன், அவர்கள் எகிப்தின் விமானப்படையை அழித்திருந்தனர். அன்று, வெறும் அரை மணி நேரத்திற்குள், 200க்கும் மேற்பட்ட எகிப்திய போர் விமானங்களை, இஸ்ரேலிய விமானப்படை அழித்தது.ஆனால் ஜோர்டானின் மஃப்ராக் விமானத் தளத்தை அழிக்கும்…

India; ipl; BCCI: இந்திய அணியில் இடம்பெற ஐபிஎல் தான் அளவுகோலா? புறக்கணிக்கப்படும் உள்ளூர் வீரர்கள்!

அடுத்து, ரஞ்சி ஆல்ரவுண்டர் தனுஷ் கோட்டியன் என்பவரை பார்டர் கவாஸ்கர் தொடருக்கு தேர்வுக்குழு தேர்வு செய்தது.முதல் தர கிரிக்கெட்டில் 38 போட்டிகளில் 113 விக்கெட்டுகளும், இரண்டு சதம் உட்பட 1,914 ரன்களும் அடித்திருக்கிறார்.இவரும் பார்டர் கவாஸ்கர் தொடர் முழுவதும் பென்ச்சிலேயே அமரவைக்கப்பட்டு இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் தேர்வுசெய்யப்படாமல் புறக்கணிக்கப்பட்டிருக்கிறார்.தனுஷ் கோட்டியன்இவ்வாறு புறக்கணிக்கப்பட்ட மற்றுமொரு முக்கியமான வீரர் அபிமன்யு ஈஸ்வரன். முதல் தர கிரிக்கெட்டில் 103 போட்டிகளில் 48.7 ஆவரேஜில் 27 சதங்களுடன் 7,841 ரன்கள் அடித்திருக்கிறார்.தற்போது இங்கிலாந்தில்…