Monthly Archives: May, 2025

குடிபோதையில் தகராறு; பணம் தர மறுத்த தந்தையை கொடூரமாக கொலை செய்த இளைஞர்

தென்காசி மாவட்டம், குருவிகுளம் அருகேயுள்ள மலையான்குளம் கிராமத்தைச் சேர்ந்த செல்லையா. இவர், அப்பகுதியில் விவசாயம் செய்து வருகிறார். இவரது மனைவி பழனியம்மாள். இவர், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இவர்களுக்கு கந்தசாமி, கணேசன், முருகையா ஆகிய மூன்று மகன்களும் சண்முகத்தாய் என்ற மகளும் உள்ளனர். கைது செய்யப்பட்ட கணேசன்.அனைவருக்கும் திருமணமாகி உள்ளூரிலேயே வசித்து வருகின்றனர். மூத்த மகனான கந்தசாமியுடன் செல்லையா வசித்து வந்தார். கடந்த ஆண்டு செல்லையா, அவருக்குச் சொந்தமான நெல் வயலை விற்று…

Priyank Panchal; cricket; bcci; முதல்தர கிரிக்கெட்டில் 29 சத்தங்கள் அடித்திருக்கும் பிரியங்க் பஞ்சல் இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காததால் ஓய்வு

இந்திய அணியில் இடம்பிடிக்கப் பல வருடமாகப் போராடிவந்த பிரியங்க் பஞ்சல், ஏமாற்றத்தோடு தனது ஓய்வை அறிவித்திருக்கிறார்.127 முதல் தரப் போட்டிகளில் சதங்களுடன் 8,856 ரன்களும், 97 லிஸ்ட் ஏ போட்டிகளில் 3,672 ரன்களும் குவித்திருக்கும் இவர், அதிகபட்சமாக 2021-22ல் தென்னாப்பிரிக்கச் சுற்றுப் பயணத்திற்கான இந்திய அணியில் இடம்பிடித்தார்.ஆனால், ஒரு போட்டியில் கூட களமிறங்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.உள்ளூர் போட்டிகளில் 40+ ஆவரேஜில் ஆட்டத்தை வெளிப்படுத்தியபோதிலும் இந்திய அணியில் இடம் கிடைக்காத விரக்தியில், முதல் தர கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக…

அதிகரிக்கும் கொரோனா தொற்று; அச்சம் கொள்ள வேண்டுமா? – மருத்துவர் சொல்வதென்ன?

நம் நாட்டில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கடந்த வாரம் 257 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போதோ 1009 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இவற்றிலும் குறிப்பாக கேரளாவில் 333 பேர் அதிகபட்சமாக பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 69 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த புதிய வகை கொரோனா வைரஸ் குறித்து சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் ராஜேஷ் அவர்களிடம் பேசினோம்.பொதுநல மருத்துவர் ராஜேஷ்”தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே தான் வருகிறது.…

தமிழ்நாட்டில் கனமழை: புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியால் எங்கெல்லாம் கனமழை பெய்யும்?

படக்குறிப்பு, கனமழை பாதிப்பு26 மே 2025புதுப்பிக்கப்பட்டது 8 நிமிடங்களுக்கு முன்னர்இன்று ஒடிசா கடலோரப் பகுதிகளை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது என்றும் இது மெதுவாக வடக்கு திசையில் நகர்ந்து அடுத்த 48 மணிநேரத்தில் வலுவடையக் கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் (மே 27) இன்று வெளியிட்ட…

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: 2-வது சுற்றில் அல்கராஸ், இகா ஸ்வியாடெக் | French Open Tennis Alcaraz Ika Swiatek in second round

பாரிஸ்: பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் நடப்பு சாம்பியன்களான கார்லோஸ் அல்கராஸ், இகா ஸ்வியாடெக் ஆகியோர் 2-வது சுற்றுக்கு முன்னேறினர். கிராண்ட் ஸ்லாம் தொடர்களில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் பாரிஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இதன் 2-வது நாளான நெ்றறு ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் நடப்பு சாம்பியனான ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ், 310-ம் நிலை வீரரான இத்தாலியை சேர்ந்த கியுலியோ செப்பியேரியை எதிர்த்து விளையாடினார். இதில் அல்கராஸ் 6-3, 6-4, 6-2…

ஒவ்வொரு ஆண்டும் மின் கட்டணம் உயர்த்தியும் ஏன் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் நஷ்டம் குறையவில்லை? – Explained

மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் அறிவுரைப்படி, 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் மின் கட்டணம் ஏற்றப்பட்டது. அந்த ஏழு மாதத்தில் மின்சார வாரியத்தின் வருமானம் சுமார் ரூ.60,000 கோடி. அப்போதும் மின்சார வாரியத்தின் கடன் என்று ரூ.26,500 கோடி என்று கூறப்பட்டது. அந்த ஏழு மாதங்களில் ஒரு யூனிட் மின்சாரம் சராசரியாக ரூ.6.89 ஆக இருந்தது.2024-ம் ஆண்டு நிதியாண்டில், மின்சார கட்டணம் ஒரு யூனிட்டிற்கு சராசரியாக ரூ.7.68 உயர்த்தப்பட்டது. ஆனால், அப்போது கூறப்பட்ட நஷ்டம் ரூ.24 ஆயிரம்…

Shreyas Iyer : 'ஜெயிச்சாதான் நம்புவாங்கன்னு எனக்கு தெரியும்!'- பஞ்சாபின் வெற்றி குறித்து ஸ்ரேயஸ்

‘பஞ்சாப் வெற்றி!’மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியை பஞ்சாப் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. இந்நிலையில், வெற்றிக்குப் பிறகு பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் சில முக்கியமான விஷயங்களை பேசியிருந்தார்.Shreyas Iyer’ஜெயிக்கிறதுதான் லட்சியம் – ஸ்ரேயஸ் ஐயர்!’ஸ்ரேயஸ் ஐயர் பேசியதாவது, ‘முதல் போட்டியிலிருந்தே போட்டிகளை வெல்ல வேண்டும் என்பதை மட்டும்தான் எங்களின் ஒரே இலக்காக வைத்திருந்தோம். ஒவ்வொரு போட்டியிலும் சரியான சமயத்தில் ஒவ்வொரு வீரர்கள் முன் வந்து சிறப்பாக ஆடியிருந்தார்கள்எங்களின் ட்ரெஸ்ஸிங் ரூம் சூழலும்…

கேரளாவில் ரசாயனங்களுடன் கவிழ்ந்த கப்பல் – அரபிக்கடல் ஆபத்து தமிழ்நாட்டை நெருங்குமா?

பட மூலாதாரம், X/@indiacoastguardகட்டுரை தகவல்அரபிக் கடலில் கேரள கரையருகே 640 கண்டெய்னர்களை கொண்ட சரக்குக் கப்பல் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. கப்பலிலிருந்து 24 பேரும் மீட்கப்பட்டனர் என்றாலும், அதிலிருந்த ஆபத்தான சரக்குகள், ரசாயனங்கள், 84 டன் எண்ணெய் ஆகியவை கசிந்து பெரும் சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று அச்சம் எழுந்துள்ளது.கசியும் எண்ணெய் அளவு அதிகமாக இருந்தால் அதன் பாதிப்பு தமிழக கரையை எட்டக்கூடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். என்ன நடந்தது?மே 23, 2025- கேரளாவின் விழிஞ்சம் துறைமுகத்திலிருந்து…

மும்பையை வீழ்த்தி முதலிடத்துக்கு முன்னேறியது பஞ்சாப் | ஐபிஎல் 2025 | IPL 2025, PBKS vs MI Live Score, Punjab Kings vs Mumbai Indians

ஐபிஎல் 2025 தொடரின் 69வது ஆட்டத்தில் மும்பையை இந்தியன்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது பஞ்சாப். ஜெய்ப்பூரின் சவாய் மான் சிங் மைதானத்தில் இரவு 7.30-க்கு தொடங்கிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச முடிவு செய்தது. முதலில் இறங்கிய மும்பை அணியின் ரியான் ரிக்கல்டன், ரோஹித் சர்மா இன்னிங்ஸை தொடங்கினர். இதில் ரியான் ரிக்கல்டன் 27 ரன்களும், ரோஹித் சர்மா 24 ரன்களும் எடுத்து வெளியேறினர். அடுத்து இறங்கிய சூர்யகுமார்…

Anakaputhur; CPIM tn; dmk; அனகாபுத்தூர் பகுதி வீடுகள் அகற்றம் விவகாரத்தில் திமுக அரசுக்கு பெ. சண்முகம் கேள்வி.

சென்னை அனகாபுத்தூர் பகுதியில் அடையாறு நதியைச் சீரமைக்க ஆற்றங்கரையோரம் ஆக்கிரமிப்புகள் அகற்றுகிறோம் என்ற பெயரில் தமிழக அரசு, காலம் காலமாக அங்கு வசிப்பவர்களை ஆக்கிரமிப்பாளர்கள் என்று குறிப்பிட்டு அவர்களின் வீடுகளைக் கடந்த வாரம் புல்டோசர் கொண்டு இடிக்கத் தொடங்கியது.மேலும், உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் பெயரில்தான் இந்த இடிப்பு நடவடிக்கையை எடுத்து வருவதாகவும், அங்கிருந்து வெளியேற்றப்படும் குடும்பங்களுக்கு 390 சதுர அடியில் ரூ. 17 லட்சம் மதிப்பீட்டில் வேறு பகுதியில் வீடு வழங்குவதாகவும் அரசு தெரிவித்திருக்கிறது.இருப்பினும், திமுக அரசின்…

1 3 4 5 6 7 31