Virat Kohli: “நான் தனிமையாக உணருவதில்லை; காரணம்…” – பர்சனல் பகிர்ந்த விராட் கோலி
“அமைதியில்தான் சமநிலையுடன் இருக்கிறேன்””நான் நாள் முழுவதும் என் குடும்பத்தினருடன் தொலைப்பேசியில் உரையாடுவேன். எனக்கு என் இடத்தில் என் வாழ்க்கையில் என்ன வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறேன்.எனக்கு, நான் தனிமையாக இருக்கிறேன், வெளியில் சுற்ற வேண்டும், இந்த இடத்துக்குச் செல்லலாம், அந்த இடத்துக்குச் செல்லலாம் என்றெல்லாம் தோன்றாது.எனக்குக் கிடைத்திருப்பவற்றைக் கொண்டு நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.” என்று பேசியுள்ளார் விராட்.விராட் கோலிதான் அமைதியாக இருக்கும்போதுதான் சமநிலையாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.”நான் அவ்வப்போது சக வீரர்களுடன் வெளியில் சுற்றுகிறேன். அது மிகவும் புத்துணர்ச்சியூட்டும்…