Daily Archives: May 7, 2025

ஊரை காலி செய்யும் இந்திய எல்லையோர கிராம மக்கள் – நிலவரம் என்ன?

பட மூலாதாரம், Reutersகட்டுரை தகவல்ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பொதுமக்கள் 26 பேர் கொல்லப்பட்ட தீவிரவாதத் தாக்குதலை தொடர்ந்து இந்திய ராணுவம் பாகிஸ்தானை தாக்கியது.அதன் எதிரொலியாக இந்திய எல்லையில் வசிக்கும் மக்கள் கிராமங்களை காலி செய்துக் கொண்டிருக்கின்றனர்.”இங்கு போர் ஆபத்து உள்ளது, பாகிஸ்தான் நள்ளிரவில் எங்களை தாக்குமா என்று எங்களுக்கு தெரியாது, என்ன நடக்கும் என்றே தெரியவில்லை. எங்கள் குழந்தைகளின் பாதுகாப்புக்காக, உணவு மற்றும் உடைகளுடன் எங்கள் உறவினர்கள் வீடுகளுக்கு செல்கிறோம்.”ஃபெரோஸ்பூரின் டெண்டிவாலா கிராமத்தைச் சேர்ந்த பன்ஜோ பாய்…

Rohit Sharma : 'விடைபெறுகிறேன்; அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி!' – ஓய்வை அறிவித்த ரோஹித் சர்மா!

‘திடீர் ஓய்வு!’டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா திடீரென அறிவித்திருக்கிறார்.ரோஹித் சர்மா – AUS v IND’ரோஹித்தின் பதிவு!’ இதுசம்பந்தமாக ரோஹித் வெளியிட்டிருக்கும் பதிவில், ‘எல்லோருக்கும் வணக்கம், டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறேன் எனும் செய்தியை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.இந்திய அணியை வெள்ளை உடையில் பிரதிநிதித்துவப்படுத்தியதற்காக பெருமைக் கொள்கிறேன். இத்தனை ஆண்டுகளாக நீங்கள் வழங்கிய அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி. இந்திய அணிக்காக தொடர்ந்து ஓடிஐ போட்டிகளில் ஆடுவேன் என்பதையும் தெரியப்படுத்திக் கொள்கிறேன்.’…

ஆபரேஷன் சிந்தூருக்கு முன்… பாகிஸ்தான் மீது இந்தியா நடத்திய இரண்டு பதிலடி தாக்குதல் பற்றி தெரியுமா?

ஆபரேஷன் சிந்தூர் என்றப் பெயரில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும், பாகிஸ்தானிலும் தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் பாகிஸ்தானின் பஞ்சாபில் உள்ள பஹாவல்பூர், முரிட்கே, சியால்கோட், பாகிஸ்தான் காஷ்மீரில் உள்ள முசாபராபாத் மற்றும் கோட்லி எனத் தீவிரவாதக் குழுக்களின் 9 முகாம்கள் தாக்கப்பட்டதாக இந்தியா தெரிவித்திருக்கிறது.காஷ்மீர் தாக்குதல்2016-ல் உரி தாக்குதலுக்கு பதிலடி:இந்தத் தாக்குதலுக்கு முன்பாக 2016-ம் ஆண்டு ஜம்மு – காஷ்மீரில் உள்ள உரி என்ற இடத்தில் இராணுவ முகாமுக்குள் புகுந்த 4 தீவிரவாதிகள் துப்பாக்கி…

இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் ரோஹித், கோலி விளையாடுவார்களா? – மனம் திறக்கும் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் | Coach Gautam Gambhir about does Rohit Kohli play in England Test series

புதுடெல்லி: ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் சிறப்பாக செயல்படும் வரை இந்திய அணியின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்று தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் கூறியுள்ளார். மேலும் வரவிருக்கும் இங்கிலாந்து டெஸ்ட் சுற்றுப்பயணத்திற்கு இரண்டு மூத்த பேட்ஸ்மேன்களை தேர்வு செய்வதில் தனக்கு எந்த பங்கும் இருக்காது என்றும் தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடரின் முதல்…

Doctor Vikatan: எல்லோருக்கும் விரதம் அவசியமா, விரதம் முடித்ததும் என்ன சாப்பிட வேண்டும்?

இன்று இன்டர்மிட்டென்ட் ஃபாஸ்டிங் (Intermittent fasting) என்பது மிகவும் பிரபலமாக இருக்கிறது. 16 மணி நேரம் சாப்பிடாமல் இருப்பது, மீதமுள்ள 8 மணி நேரத்தில் சாப்பிடுவது போன்ற இன்டர்மிட்டென்ட் ஃபாஸ்டிங் உங்களுக்கு ஏற்றுக்கொள்கிறது என்றால் அதைப் பின்பற்றலாம்.  விரதமிருக்கும் நேரத்தில் வெறும் தண்ணீர் மட்டும் குடிப்பது, பழங்கள் அல்லது பழச்சாறு குடிப்பது என உங்களுக்கு வசதியானதைச் செய்யலாம். விரதமிருப்பதை “ஒரு பொழுது’ என்று சொல்வார்கள். அதற்கேற்றபடி ஒரு வேளை மட்டும் உணவு சாப்பிடலாம். விரதமிருப்பதன் பலன்களை இன்று மேற்கத்திய நாடுகள் பெரிய…

ஆபரேஷன் சிந்தூர்: பாகிஸ்தானில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது எப்படி? நேரலை

பட மூலாதாரம், Getty Images7 மே 2025, 00:27 GMTபுதுப்பிக்கப்பட்டது 31 நிமிடங்களுக்கு முன்னர்”பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இன்று இலக்குகளைக் குறிவைத்து ராணுவ தாக்குதல்களை மேற்கொண்டுள்ளோம்” என்று இந்தியா அறிவித்துள்ளது. “பஹல்காமில் 26 அப்பாவி உயிர்களை பறித்த பயங்கரவாத தாக்குதல்களுக்குப் பதிலடியாக இந்தத் தாக்குதல்களைத் திட்டமிட்ட மற்றும் நடத்திய பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத இலக்குகளைக் குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளோம். ஆபரேஷன் சிந்தூர் எனும் துல்லிய தாக்குதலில், ஒன்பது இலக்குகள் குறிவைத்து தாக்கப்பட்டன” என…

Gill : ‘மும்பை இந்தியன்ஸை வீழ்த்தியது பற்றி குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் கில் பேசியவை!’

நாங்கள் பேட்டிங்கைத் தொடங்கும்போதே மழையும் ஆரம்பித்துவிட்டது. சூழல் ஒரு டெஸ்ட் மேட்ச்சைப்போல இருந்தது. – குஜராத் கேப்டன் கில்Published:Today at 1 AMUpdated:Today at 1 AMSubhman Gill ( IPL ) நன்றி

Maaman audio launch: மாமன் பட இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சூரி குறித்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பேச்சு

வெற்றிமாறனின் `விடுதலை” படத்தில் கதை நாயகனாகச் சூரிக்குக் கிடைத்த வரவேற்பை அடுத்து, `கொட்டுக்காளி’, `கருடன்’ எனத் தொடர்ந்து ஹிட் கொடுத்தார் நடிகர் சூரி. இதையடுத்து பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் சூரி நடித்த ‘மாமன்’ திரைப்படம் வரும் மே 9ம் தேதி திரையரங்குகளில் வெளியாகக் காத்திருக்கிறது. இயக்குநர் பாண்டியராஜி உதவி இயக்குநராக இருந்தவர் பிரசாந்த் பாண்டிராஜ். தாய்மாமனின் கதையாக உருவாகியிருக்கும் இத்திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி குடும்பங்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. இதன் வெளியீட்டையொட்டி இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில்…

மழையால் போட்டி தாமதம்: குஜராத் அணி த்ரில் வெற்றி! | GT vs MI | MI vs GT Highlights, IPL 2025: Gujarat Titans beat Mumbai Indians

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தியது குஜராத் டைட்டன்ஸ். இரவு 7.30 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ், 2022-ம் ஆண்டு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் மோதியது. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி பவுலிங் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் இறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியின் ரியான் ரிக்கல்டன், ரோஹித் சர்மா இன்னிங்ஸை தொடங்கினர். ரிக்கல்டன் 2 ரன்களுடன்,…

இலங்கையில் காற்றாலை திட்டமா? கனிம மணல் திட்டமா? – மன்னார் மக்களின் குற்றச்சாட்டுக்கு அதானி நிறுவனம் விளக்கம்

படக்குறிப்பு, கட்டுரை தகவல்இலங்கையின் பல்வேறு பகுதிகளில் காற்றாலை மின் உற்பத்தி கோபுரங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ள போதிலும், மன்னார் தீவுப் பகுதியில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள மற்றும் ஸ்தாபிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள காற்றாலை மின் உற்பத்தி கோபுரங்கள் குறித்து தொடர்ந்து சர்ச்சை நிலவி வருகின்றது.இலங்கை மின்சார சபைக்கு சொந்தமான 30 காற்றாலை மின் உற்பத்தி கோபுரங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதுடன், மேலும் சில காற்றாலை கோபுரங்கள் தற்போது ஸ்தாபிக்கப்பட்டு வருகின்றன.அத்துடன், இந்தியாவின் அதானி நிறுவனம் மன்னார் பகுதியில் காற்றாலை மின் உற்பத்தி திட்டத்தை செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்த…