Naangal Review: டாக்சிக் தந்தையும் பாதிக்கப்படும் மகன்களும்! எதார்த்தம் பேசும் படைப்பு ஈர்க்கிறதா?
1998 காலகட்டத்தில் ஊட்டியில் தனியார்ப் பள்ளி ஒன்றை நடத்துவதோடு, அப்பள்ளிக்கு முதல்வராகவும் உள்ளார் அப்துல் ரஃபே. அவரது மனைவி பிரிந்துவிட்டதால், மகன்கள் மிதுன், ரிதிக் மோகன், நிதின் தினேஷ் ஆகியோருடன் வசித்து வருகிறார். பள்ளி நடத்துவதில் ஏற்பட்ட நஷ்டத்தால், தண்ணீர், போதிய உணவு, மின்சார இணைப்பு என எதுவுமில்லாமல் வறுமையில் மாட்டுகிறது குடும்பம். இந்த வறுமையோடு, தந்தையின் அதீத கண்டிப்பும், அடக்குமுறையும், வன்முறையும் சிறுவர்களைத் தினம் தினம் அவதிக்குள்ளாக்குகின்றன. தந்தை அப்துல் ரஃபே ஏன் இப்படியிருக்கிறார் என்பதோடு,…









