`தோற்றுப்போன கொள்கையைத் திணிக்கப் பார்க்கிறது ஒன்றிய அரசு!’ – சாடும் அன்பில் மகேஸ்
தி.மு.க தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலினின் 72-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் கிழக்கு மாநகர மலைக்கோட்டை பகுதி தி.மு.க சார்பில் மெயின்காட்கேட் ஹோலி கிராஸ் கல்லூரி பழைய குட்செட் ரோட்டில் நடைபெற்றது.இந்த பொதுக்கூட்டத்தில், திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்துகொண்டு பேசுகையில், “ஒன்றிய அரசு, தோற்றுப் போன கொள்கையான மும்மொழிக் கொள்கையை நம் மீது திணிக்க பார்க்கிறது. தமிழ்நாடு இந்தித் திணிப்பை ஏற்றுக் கொள்ளாததால் தமிழ்நாட்டுக்கு நிதி தராமல் ஒன்றிய அரசு…