வேலூர்: வயதான தாயைப் போதையில் கொடூரமாகத் தாக்கிய மகன்; பதைபதைக்க வைத்த வீடியோ; பின்னணி என்ன?
வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அருகிலுள்ள சந்தைமேடு காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் மூதாட்டி அலமேலு. இவரின் மகன் அருண்குமார்.மதுப் பழக்கத்திற்கு அடிமையான அருண்குமார் வேலைக்குச் செல்வதில்லை. திருமணமாகி மனைவி, இரண்டு பிள்ளைகள் இருந்த நிலையிலும் குடித்துவிட்டு அவர்களை அடித்துத் துன்புறுத்தி வந்திருக்கிறார்.இதனால் வெறுப்படைந்த மனைவி, பிள்ளைகளைக் கூட்டிக்கொண்டு அருண்குமாரைப் பிரிந்து சென்றுவிட்டார். வயதான தாய் அலமேலு ஆடு, மாடுகளை வளர்த்து, அதில் கிடைக்கும் சொற்ப வருமானத்தில்தான் குடும்பச் செலவுகளைக் கவனித்து வருகிறார்.கொடூரமாக தாக்கப்பட்ட காட்சிகள்இந்நிலையில், தாய் என்றும்…









