தமிழ்நாட்டை சேர்ந்த அமெரிக்க தொழிலதிபரும், அவரது மனைவியும் மாறி மாறி குற்றச்சாட்டு- என்ன பிரச்னை?
பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, சித்தரிப்புப்படம்கட்டுரை தகவல்தன் மனைவியின் போலியான புகாரின்பேரில் காவல்துறை தன்னைத் துரத்துவதால், தலைமறைவாக இருப்பதாகவும் காவல்துறை 25 லட்ச ரூபாய் கேட்டு மிரட்டுவதாகவும் அமெரிக்காவைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் குற்றம்சாட்டியுள்ளார். ஆனால், தன் மகனை, இவர் கடத்திச் சென்றிருப்பதாக அவரது மனைவி வீடியோ வெளியிட்டிருக்கிறார். இந்த விவகாரத்தில் என்ன நடக்கிறது?சென்னையைச் சேர்ந்த பிரசன்னா ஷங்கர், அமெரிக்காவில் ஒரு மனித வள மேம்பாட்டு நிறுவனத்தை நடத்திவருகிறார். இவருக்கு திருமணமாகி, 9 வயதில் மகன் இருக்கிறார்.…









