Daily Archives: February 26, 2025

விமானத்தில் சக பயணி மரணம்: தம்பதிக்கு அருகில் சடலத்தை கிடத்திய விமான நிறுவனம் – என்ன நடந்தது?

கட்டுரை தகவல்கத்தார் ஏர்வேஸ் விமானத்தில் உயிரிழந்த பயணி ஒருவரின் சடலம் தங்களுக்கு அருகில் வைக்கப்பட்ட அதிர்ச்சியளிக்கும் சம்பவம் குறித்து ஆஸ்திரேலிய தம்பதியினர் பேசியுள்ளனர்.மிட்செல் ரிங், ஜெனிஃபர் கோலின் என்ற தம்பதி வெனிஸ் நகருக்கு விடுமுறைக் காலத்தை கழிக்கச் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் மெல்போர்னில் இருந்து தோஹாவுக்கு விமானம் மூலம் செல்ல வேண்டியிருந்தது.அந்த விமானப் பயணத்தின்போது, தங்களுக்கு அருகிலுள்ள பயணிகள் நடைபாதையில் ஒரு பெண் இறந்ததாக ஆஸ்திரேலியாவின் சேனல் 9 செய்தி ஊடகத்துக்கு அந்தத் தம்பதியினர் தெரிவித்தனர்.படக்குறிப்பு,…

“KKR அணியின் கேப்டனாக தயார்!” – விருப்பத்தை வெளிப்படுத்திய வெங்கடேஷ் அய்யர் | Venkatesh Iyer definitely ready to captain KKR at IPL 2025

ஸ்ரேயஸ் அய்யர் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாகச் சென்ற பிறகே ஐபிஎல் 2025-ற்கு இன்னும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்வாகம் கேப்டன் பொறுப்பிற்கு யார் என்பதை அறிவிக்கவில்லை. இந்நிலையில் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஆல்ரவுண்டர் வெங்கடேஷ் அய்யர் கேப்டன்சிக்குத் தான் தயார் என்று தெரிவித்துள்ளார். மார்ச் 22ம் தேதி ஈடன் கார்டன்ஸில் கொல்கத்தா அணி ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியைத் தன் முதல் போட்டியில் சந்திக்கின்றது. ரூ.23.75 கோடிக்கு மீண்டும் அய்யரை வாங்கிய கொல்கத்தா நைட்…

வருஷநாடு: பலத்த காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட விவசாயிகள்; கரடி தாக்கியதா என விசாரணை!

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி தாலுகா வருஷநாடு அருகே கோவில்பாறை பகுதியில் பஞ்சதாங்கி மலையடிவாரத்தில் இலவம், எலுமிச்சை, கொட்டை முந்திரி விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் வருஷநாடு அருகே உள்ள தர்மராஜபுரம் பகுதியைச் சேர்ந்த கருப்பையா(56) என்பவர் இலவமர தோட்டத்திலும், தங்கம்மாள்புரம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன்(45) என்பவர் அவருடைய எலுமிச்சை தோட்டத்திலும் உடலில் பலத்த காயங்களுடன் சடலமாக கிடந்தனர்.சடலத்தை மீட்ட போலீஸார்இதுகுறித்து தகவல் கிடைத்ததும் கடமலைக்குண்டு போலீஸாரும், கண்டமனூர் வனச்சரக அதிகாரிகளும் நிகழ்விடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். முதற்கட்ட…

IPL 2025: நெருங்கும் ஐபிஎல்; சென்னை வந்த CSK வீரர்கள் – போட்டிகள் முழு விவரம் இங்கே!|CSK players coming to chennai for practices

ஐபிஎல் 2025 போட்டிகள் வரும் மார்ச் 22ஆம் தேதி தொடங்கி மே 25ஆம் தேதி வரை நடைபெறுகிறது.இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 2024 இறுதியில் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் ஒவ்வொரு அணிகளும் தங்களுக்கு வேண்டிய வீரர்களை ஏலத்தில் எடுத்திருக்கின்றனர். இந்த தொடரில் சிஎஸ்கே அணி ஆறாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்து இருக்கிறது. இந்நிலையில் ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கான பயிற்சியை மேற்கொள்வற்காக சிஎஸ்கே வீரர்கள் சென்னை வர ஆரம்பித்துவிட்டார்கள். அந்தவகையில்…

Doctor Vikatan: வைட்டமின் மாத்திரைகளை இப்படி எடுத்தால்தான் பலன் கிடைக்குமா..? | How to take vitamin tablets for maximum benefit?

உதாரணத்துக்கு, நீங்கள் பேரீச்சம்பழம், வெல்லம் போன்றவற்றைச் சாப்பிடும்போது, கூடவே ஆரஞ்சு ஜூஸ்,  எலுமிச்சைப்பழ ஜூஸ் போன்றவற்றைக் குடிக்கும்போது இரும்புச்சத்து நன்றாக உட்கிரகிக்கப்படும். கீரை சாப்பிடுகிறீர்கள் என்றால், அத்துடன் வைட்டமின் சி சத்துள்ள உணவைத் திட்டமிட்டுக் கொள்ளலாம். எலுமிச்சைப்பழ சாதம், கீரை மாதிரியான காம்போவில் எடுத்துக்கொள்ளலாம்.வைட்டமின் டியும் கால்சியமும் சேர்த்து எடுத்துக்கொள்ளப்பட வேண்டியவை.  இந்த இரண்டும் இரட்டைப் பிறவிகள் போல… வைட்டமின் டி சத்தானது முட்டை, செறிவூட்டப்பட்ட உணவுகளில் (fortified foods)  அதிகம் கிடைக்கும். ஆனால், ஒவ்வொரு வைட்டமின் சப்ளிமென்ட்டையும் எதனுடன் சேர்த்து எடுக்க வேண்டும் என்று…

தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை எதற்காக கட்டப்பட்டது? அதன் தனிச்சிறப்புகள் என்ன? ஒரு வரலாற்றுப் பார்வை

கட்டுரை தகவல்எழுதியவர், மாயகிருஷ்ணன் கண்ணன்பதவி, பிபிசி தமிழுக்காக 26 பிப்ரவரி 2025, 02:00 GMTபுதுப்பிக்கப்பட்டது 42 நிமிடங்களுக்கு முன்னர்தரங்கம்பாடியில் அமைந்துள்ள டேனிஷ் கோட்டை 400 ஆண்டுகளைக் கடந்தும் உறுதியாக நிற்கிறது. இந்தக் கோட்டை எதற்காக கட்டப்பட்டது?தமிழ்நாட்டின் கிழக்குக் கடற்கரையில், மயிலாடுதுறையில் இருந்து நாகப்பட்டினம் செல்லும் வழியில் அமைந்திருக்கிறது துறைமுக நகரமான தரங்கம்பாடி. சங்க காலத்திலேயே துறைமுக நகரமாக விளங்கிய இந்தப் பகுதி பிறகு தனது முக்கியத்துவத்தை இழந்து, 16, 17ஆம் நூற்றாண்டுகளில் மீண்டும் முக்கியமான வர்த்தகத் துறைமுகமானது.14ஆம்…

பிறப்பு சான்றிதழ் மோசடி வழக்கில் லக்சயா சென் மீது நடவடிக்கை எடுக்க தடை | Action against Lakshya Sen in birth certificate fraud case stayed

பாட்மிண்டன் வீரர் லக்சயா சென் மீது நடவடிக்கை எடுக்க கர்நாடக போலீஸாருக்கு தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாட்மிண்டன் வீரர் லக்சயா சென், பிறந்த தேதியை மாற்றி மோசடி செய்துள்ளார் என்று கூறி கர்நாடகாவைச் சேர்ந்த நாகராஜ் என்பவர் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். அதில், லக்சயா சென் மற்றும் அவரது சகோதரர் சிராக் சென் ஆகியோரின் பெற்றோர் திரேந்திரா, நிர்மலா சென், அவரது சகோதரரும், பயிற்சியாளரும், கர்நாடக பாட்மிண்டன் சங்க ஊழியரும்…

UP-க்கு Plus TN -க்கு MINUS – BJP -ன் அடுத்த ஆட்டம்? | STALIN Vs MODI | ADMK | DMK | Imperfect Show

இம்பர்ஃபெக்ட் ஷோ ஃவில், * சென்னையில் பாக்ஸிங் அகாடமியை தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! * அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்… ஏன்?* “மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தியதற்குத் தொகுதி குறைப்புதான் தண்டனையா? பாஜகவின் சூழ்ச்சியைத் தமிழ்நாடு ஏற்காது” – ஜெயக்குமார்* “மொழிப்போருக்கு ஒன்றிய அரசு வித்திடுகிறது. அதற்குத் தயாராக இருக்கிறோம்” -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்* உளுந்தூர்பேட்டை ரயில் நிலைய பெயர்ப் பலகையில் உள்ள இந்தி எழுத்துக்கள் அழிப்பு!* போலி நாடகத்தை மக்கள் நம்பப்போவதில்லை: அண்ணாமலை* “500 ரூபாய்…

“பவுலிங் மோசமா இருக்கு; இனிமேலும் பொறுக்க முடியாது…” – பாக். அணி குறித்து வாசிம் அக்ரம் |Wasim Akram about pakistan team

2025 சாம்பியன்ஸ் டிராபியில் பாகிஸ்தான் அணி வழக்கம்போல குரூப் சுற்றிலேயே வெளியேறி இருக்கிறது. பாகிஸ்தான் அணியைப் பலரும் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் பாகிஸ்தான் அணியை வாசிம் அக்ரமும் விமர்சித்துப் பேசியிருக்கிறார். “பொறுத்தது போதும். இனிமேலும் பொறுத்துக்கொள்ள முடியாது. நாம் ஒருநாள் போட்டிகள் மற்றும் டி20 போட்டிகளில் கடந்த இரண்டு ஆண்டுகளில் ஒரே வீரர்களை வைத்துக்கொண்டு தோல்விகளை மட்டுமே சந்தித்து வருகிறோம். பாகிஸ்தான்இந்த முறை தைரியமான நடவடிக்கையை எடுத்து இளம் வீரர்களை உள்ளே கொண்டு வர வேண்டும். பயமில்லாமல்…

எகிப்து: 5,000 ஆண்டுகள் பழமையான மம்மிகளில் நறுமணம் வீசுவது எப்படி?

பட மூலாதாரம், APகட்டுரை தகவல்எழுதியவர், அலெக்ஸ் லோஃப்டஸ்பதவி, பிபிசி செய்திகள்25 பிப்ரவரி 2025, 07:07 GMTபுதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர்பண்டைய எகிப்தில் மம்மி ஆக்கப்பட்ட உடல்கள், 5,000 ஆண்டுகளாக சர்கோபாகஸ் எனப்படும் கல்லால் ஆன சவப்பெட்டியில் இன்னும் நல்ல வாசனையுடன் இருப்பதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.இதுபோன்ற 9 மம்மிகளை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர். அவற்றிலிருந்து வந்த வாசனையின் விதத்தில் சில வேறுபாடுகள் இருந்த போதிலும், அவற்றின் வாசனையை கண்டறிந்தனர். இந்த வாசனையை, வேதியியல் ரீதியாக மீண்டும் உருவாக்கினால்,…