Daily Archives: February 21, 2025

இலங்கை: வழக்கறிஞர் வேடமிட்டு நீதிமன்றத்திலேயே கொலை செய்த நபர் யார்? என்ன நடந்தது?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, பிரதிவாதியை சுடப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி ஒரு புத்தகத்துக்குள் மறைத்து வைத்துக் கொண்டு வரப்பட்டதாகக் கூறப்படுகிறதுகட்டுரை தகவல்குற்றப் பின்னணி உள்ள சட்டவிரோத கும்பல் ஒன்றின் தலைவர், இலங்கையில் நீதிமன்றத்தின் உள்ளேயே, வழக்கறிஞர் வேடமிட்ட ஒரு நபரால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.காவல்துறை அளித்த தகவலின்படி, தாக்குதல் நடத்திய நபர் ஒரு கைத்துப்பாக்கியைப் பயன்படுத்தியுள்ளார்.ஒரு புத்தகத்தின் உள்ளே துளையிட்டு அந்த கைத்துப்பாக்கியை மறைத்து வைத்து நீதிமன்றத்திற்குக் கொண்டு வந்துள்ள ஒரு பெண், அதைத்…

சாலை விபத்தில் காயமின்றி தப்பினார் சவுரவ் கங்குலி | Sourav Ganguly escapes unhurt in road accident

கொல்கத்தா: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி பயணித்த கார் சாலை விபத்தில் சிக்கிய நிலையில் அவர் காயமின்றி தப்பினார். நேற்று (பிப்.20) இரவு மேற்கு வங்க மாநிலம் ஹூக்ளியில் துர்காபூர் விரைவுச் சாலையில் அவரது கான்வாயில் இருந்த கார்கள் அணிவகுத்துச் சென்றுள்ளன. ரேஞ்ரோவர் ரக காரில் மிதமான வேகத்தில் கங்குலி பயணித்துள்ளார். அப்போது திடீரென லாரி ஒன்று வேகமாக அவர்களது கான்வாயை முந்திச் சென்றுள்ளது. அதன் மீது மோதாமல் இருக்க கங்குலி பயணித்த…

`மொழி’ குறித்த ஜெக்தீப் தன்கரின் பேச்சு: `பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது’ – கனிமொழி ட்வீட் | Kanimozhi Sla ms BJP on Hindi Imposition Row

Kanimozhi ட்வீட்ஜெக்தீப் தன்கரின் பேச்சை சுட்டிக்காட்டி, இந்தித் திணிப்பு விவகாரத்தில் மத்திய அரசைக் கண்டித்திருக்கிறார், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி. முற்காலத்தில் இஸ்லாமியர்கள் இந்தியாவின் கலாசாரம் மற்றும் மொழியை அழிக்க முயன்றாகக் கூறும் ஜெக்தீப் தன்கரின் பேச்சை, இன்று மத்திய அரசு இந்தியை திணிப்பதன் மூலம் தமிழ்நாட்டின் மொழி மற்றும் கலாசாரத்தை சிதைக்க முயல்வதாக பொருள்படும்படி ட்வீட் செய்துள்ளார் கனிமொழி. ஜகந்தீப் தன்கரின் பேச்சு குறித்த செய்தியை ரீ ட்வீட் செய்து, “பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது” என…

Kerala: மேட்சை காப்பாற்றிய ஹெல்மெட்… ரஞ்சி வரலாற்றில் முதன்முறையாக பைனலுக்கு முன்னேறிய கேரளா | Kerala cricket team entered ranji trophy final for the first time

நடப்பு ரஞ்சி டிராபி தொடர் இறுதிகட்டத்தை எட்டியிருக்கிறது. பிப்ரவரி 26-ம் ரஞ்சி டிராபி பைனல் தேதி நடக்கவிருக்கிறது. இதனை முன்னிட்டு, பிப்ரவரி 17-ம் தேதி அரையிறுதி ஆட்டங்கள் தொடங்கின. ஒன்றில், விதர்பாவும் மும்பையும் மோதின. மற்றொன்றில் குஜராத்தும் கேரளாவும் மோதின. இதில் முதல் நான்கு நாள்கள் முடிவில், விதர்பா vs மும்பை போட்டியில், முதல் இன்னிங்ஸில் விதர்பா 383 ரன்களும், மும்பை 270 ரன்களும் எடுக்க, இரண்டாவது இன்னிங்ஸில் விதர்பா 292 ரன்கள் குவித்து மும்பைக்கு 406…

Doctor Vikatan: பிறந்த குழந்தையின் தொப்புள் வீக்கம்… தானாகச் சரியாகுமா, சிகிச்சை தேவையா? | Newborn baby’s umbilical swelling… Will it go away on its own, or does it need treatment?

குழந்தையின் வயிற்றுப்பகுதியில் உள்ள தசையின் தளர்ச்சி காரணமாகவோ, அல்லது துளைபோன்று தசைப்பகுதி சற்று வளர்ச்சி அடையாமல் இருப்பதாலோ வயிற்றின் உள்பகுதியில் உள்ள திசு மற்றும் குடல் போன்ற உறுப்புகள், தொப்புளைச் சுற்றி வீங்கியது போல பிதுங்கி வெளிப்படுவதே ‘அம்பிலிகல் ஹெர்னியா’ எனப்படுகிறது. இந்தப் பிரச்னை, பொதுவாக குறைப்பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளிடம் காணப்படுகிறது. அதாவது 30 முதல் 40 சதவிகிதம் என்ற அளவில்…. ஆனால், நிறை மாதத்தில் பிறக்கும் குழந்தைகளிலும் 10 சதவிகிதத்துக்கும் குறைவான சிலரிடமும் இந்தப் பிரச்னை காணப்படுகிறது.சிறிய அளவிலான தொப்புள் வீக்கமானது,…

பிபிசி புலனாய்வு – மேற்கு ஆப்பிரிக்காவில் அதிகரிக்கும் போதைப் பழக்கத்தின் பின்னணியில் இந்திய மருந்து நிறுவனம்

படக்குறிப்பு, மும்பையில் செயல்படும் ஏவியோ ஃபார்மா எனும் மருந்து உற்பத்தி நிறுவனம், பல்வேறு வணிக பெயர்களில் மாத்திரைகளை தயாரித்து, சட்டபூர்வமான மருந்துகள் போல் தோற்றமளிக்கும் வகையில் அவற்றை உற்பத்தி செய்கின்றனகட்டுரை தகவல்இந்திய மருந்து நிறுவனம் ஒன்று, உரிமம் பெறாத, தீவிர போதை பழக்கத்துக்கு உள்ளாக்கும் ஓபியாய்டுகளை (ஓபியம் செடியிலிருந்து தயாரிக்கப்படும் வலி நிவாரண மற்றும் சட்ட விரோத மருந்துகள்) தயாரித்து, அவற்றை மேற்கு ஆப்பிரிக்காவுக்கு சட்டவிரோதமாக ஏற்றுமதி செய்து, அங்கு பெரும் பொது சுகாதார நெருக்கடியை உண்டாக்குகிறது…

பேட்டிங், பவுலிங்கில் முதல் 10 ஓவரிலேயே இந்திய அணி வென்றது எப்படி? | How team India win the first 10 overs in both batting and bowling

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரில் நேற்று துபாயில் நடைபெற்ற இந்திய – வங்கதேச அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் வங்கதேசத்தை இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்ததோடு, முதல் போட்டியை தோற்ற பாகிஸ்தானுக்கு கடும் நெருக்கடியையும் கொடுத்துள்ளது. டாஸ் வென்றிருந்தால் முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்திருப்போம் என ரோஹித் சர்மா கூறியது எத்தனை பெரிய தவறில் போய் முடிந்திருக்கும் என்பது போட்டியைப் பார்த்தவர்களுக்குப் புரிந்திருக்கும். ஆகவே இன்னும் கேப்டன்சியில் ரோஹித்…

Green & Health: எந்தப் பிரச்னைக்கு என்ன கீரை சாப்பிடணும்? | Health: Greens and its health benefits – Ayurvedic doctor explain

குளிர்ச்சித்தன்மை கொண்டது. பெரிய பெரிய இலைகள் கொண்டதால், கழுவுவதற்கு மிகவும் சுலபம்.சத்துக்கள்: வைட்டமின் கே, ஏ, பி, சி, கால்சியம், பாஸ்பரஸ், துத்தநாகம், தாமிரம், காப்பர், இரும்பு, அயோடின், ஃபோலிக் அமிலம், பீட்டாகரோட்டின், ரிபோஃபிளேவின் உள்ளிட்ட சத்துக்கள் நிறைவாகக் கொண்டது.  பலன்கள்: உடல் சூட்டைத் தணிக்கும். மூளை வளர்ச்சிக்கு உதவும். சிறுநீரைப் பெருக்கி உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றும். ரத்த உற்பத்திக்கு உதவும். சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. புற்றுநோய் செல்களை வளரவிடாமல் தடுக்கிறது. ஃபோலிக் அமிலம் இருப்பதால்,…

BanvInd : 'ஏமாற்றிய கோலி; விடாமுயற்சியுடன் சதமடித்த கில்!' – எப்படி வென்றது இந்தியா?

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி தங்களின் முதல் போட்டியில் ஆடி முடித்திருக்கிறது. வங்கதேசத்துக்கு எதிரான இந்தப் போட்டியில் இந்திய அணி கொஞ்சம் தடுமாறியிருந்தாலும் 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது.Ind vs Banவங்கதேச அணிதான் டாஸை வென்றிருந்தது. முதலில் பேட்டிங் செய்யப்போவதாக அறிவித்தனர். டாஸை தோற்றதில் ரோஹித் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. நாங்களே சேஸ் செய்யத்தான் நினைத்தோம் எனக் கூறி ‘துபாயில் லைட்ஸூக்கு கீழ் பேட்டுக்கு பந்து நன்றாக வரும்.’ என காரணமும் கூறினார். வங்கதேச அணி பேட்டிங்கை…

காங்கிரஸ்: செல்வப் பெருந்தகைக்கு எதிராக டெல்லியில் மாநில தலைவர்கள் புகார் – அவர் கூறுவது என்ன?

பட மூலாதாரம், Facebookபடக்குறிப்பு, கடந்த 2024ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் செல்வப்பெருந்தகை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராகப் பொறுப்பேற்றார். கட்டுரை தகவல்தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகைக்கு எதிராக, 15க்கும் மேற்பட்ட மாவட்டத் தலைவர்கள் டெல்லியில் முற்றுகையிட்டு புகார் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், “கட்சி விதிகளின்படி பதவிக்காலம் முடிந்த காலாவதியான தலைவர்கள் புகார் கூறுகிறார்கள். கட்சியை வெளிப்படைத்தன்மையுடன் நடத்தி வருகிறோம்” என்று செல்வப் பெருந்தகை தெரிவித்துள்ளார்.படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக்…