ASER அறிக்கை: தமிழக கிராம பள்ளி மாணவர்களின் வாசிப்பு, அடிப்படை கணிதம் எப்படி இருக்கிறது?
பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, சித்தரிப்புப் படம் கட்டுரை தகவல்தமிழ்நாட்டில் ஊரகப் பகுதிகளில், தனியார் மற்றும் அரசுப் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு படிக்கக்கூடிய மாணவர்களுள் 64.2% மாணவர்கள்தான் இரண்டாம் வகுப்பு பாடங்களை வாசிப்பதாகவும் 40% மாணவர்களே வகுத்தல் கணக்குகளை போடுவதாகவும் கல்வி ஆண்டு நிலை அறிக்கை 2024 (ASER Rural 2024) கூறுகிறது.பள்ளி மாணவர்களிடையே வாசித்தல் மற்றும் அடிப்படை கணிதத் திறன் தொடர்பாக இந்த ஆய்வு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், 2024ஆம் ஆண்டுக்கான…