Daily Archives: January 11, 2025

இலங்கை: ‘பொங்கலுக்கு கூட அரிசி இல்லை’ – தொடரும் தட்டுப்பாடு

பட மூலாதாரம், KRISHANTHANபடக்குறிப்பு, சந்தையில் அரிசிக்கான தட்டுப்பாடு இன்றும் நிலவி வருகின்றதுகட்டுரை தகவல்இலங்கையில் பொங்கல் பண்டிகை வரவுள்ள நிலையில், அரிசி தட்டுப்பாடு தொடர்வதாக மக்கள் குற்றஞ்சுமத்துகின்றனர்.நாட்டில் தொடர்ச்சியாக நிலவும் அரிசி தட்டுப்பாட்டை விரைவில் நிவர்த்தி செய்வதற்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மக்கள் போராட்டங்களை ஆரம்பித்துள்ளனர்.இலங்கை அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில், மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்திக்கு கடந்த ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் மக்கள் வாக்களித்து ஆட்சி பீடத்தில்…

Ajith Kumar Racing: `கார் பந்தயத்தில் அஜித் பங்கேற்கவில்லையா?’ – டீம் வெளியிட்ட திடீர் அறிக்கை| Ajith kumar step Back from 24H Racing as Driver

Ajith Kumar Racingதுபாயில் நடைபெறும் 24H கார் பந்தயத்தில் தனது அணியுடன் பங்கேற்கவிருந்த நடிகர் அஜித் குமார், கார் ஓட்டுவதிலிருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அஜித் குமார் கார் ரேசிங் அணியின் சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “கடந்த இரண்டு நாட்களாக அஜித் குமார் ரேசிங் அணியின் முக்கிய கமிட்டி சமீபத்தில், 24H துபாய் பந்தயத்துக்கு தயாராகி வந்த அஜித் குமாருக்கு ஏற்பட்ட விபத்தின் தாக்கங்களை ஆராய்ந்து வந்தது.இந்த 24H போட்டி அதிக திறனைக் கோருகிறது, அணியினர் இந்த சீசனில்…

Book Fair: அம்பேத்கர் பற்றி வெளியான புதிய புத்தகங்கள் என்னென்ன? | new books about ambedkar for chennai book fair 2024-25

தமிழகத்தில் அம்பேத்கரிய இதழ்கள்தமிழகத்தில் அம்பேத்கரிய இதழ்கள்கடந்த கால வரலாறு கலை அரசியல் பண்பாடு ஆகியவற்றை அறிவதற்கு நமக்கு ஆவணங்களாக இருப்பது இதழ்களே. அப்படியான வரலாற்றை டாக்டர் அம்பேத்கர் அவர்களை மையமாக வைத்து இதழியல் வரலாற்றை எழுதியுள்ளார் ஜெ. பாலசுப்ரமணியம். ‘தமிழகத்தில் அம்பேத்கரிய இதழ்கள்’ எனும் நூலில் அம்பேத்கரின் இதழியல் பணிகளையும், 1930க்குப் பின் தமிழ்நாட்டில் இயங்கிய உரிமை, உதயசூரியன், தொண்டு, விடுதலை முரசு ஆகிய இதழ்களைப் பற்றியும் விவரித்து எழுதியுள்ளார்.பாபாசாகேப் அம்பேத்கரின் ஜனநாயகம் பாபாசாகேப் அம்பேத்கரின் ஜனநாயகம்…

கூச் பெஹர் டிராபியில் தமிழக அணி சாம்பியன் | Tamil Nadu team is the champion in the Cooch Behar Trophy

19 வயதுக்குட் உட்பட்டோருக்கான கூச் பெஹர் டிராபி கிரிக்கெட் தொடரில் தமிழ்நாடு – குஜராத் அணிகள் இடையிலான இறுதி ஆட்டம் அகமதாபாத்தில் நடைபெற்றது. இதன் முதல் இன்னிங்ஸில் குஜராத் 380 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. தொடர்ந்து விளையாடிய இந்திய அணி நேற்றைய கடைசி நாள் ஆட்டத்தில் 150.1-வது ஓவரில் 413 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. ஆர்.கே.ஜெயந்த் 91, ஆர்.பிரவீன் 42 ரன்கள் விளாசினர். இந்த ஜோடி 8-வது விக்கெட்டுக்கு 104 ரன்கள் சேர்த்து அசத்தியது. இதையடுத்து விளையாடிய…

கேரளா: நடிகை ஹனிரோஸ் புகாரில் நகைக்கடை அதிபர் கைது – என்ன நடந்தது?

பட மூலாதாரம், Special Arrangementபடக்குறிப்பு, நடிகை ஹனிரோஸ் அளித்த புகாரின்பேரில் கேரளாவின் பிரபல நகைக்கடை தொழிலதிபர் பாபி செம்மனூர் கைது செய்யப்பட்டுள்ளார்கட்டுரை தகவல்எழுதியவர், சேவியர் செல்வக்குமார்பதவி, பிபிசி தமிழ்10 ஜனவரி 2025புதுப்பிக்கப்பட்டது 24 நிமிடங்களுக்கு முன்னர்தன்னிடம் ஆபாசமாக நடந்து கொண்டதாகவும், இரட்டை அர்த்தத்தில் பேசியதாகவும் கேரள நடிகை ஹனிரோஸ் அளித்த புகாரின்பேரில் பிரபல நகைக்கடை தொழிலதிபர் பாபி செம்மனூர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.பாலியல் ரீதியாக ஒருவரைத் தொடுதல், அணுகுதல், சமூக ஊடகத்தில் பாலியல் கருத்துகளைப் பகிர்தல்…

சென்னை டி 20 போட்டிக்கு நாளை டிக்கெட் விற்பனை | Tickets for the Chennai T20 match go on sale tomorrow

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 டி 20 ஆட்டங்கள் மற்றும் 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதில் டி 20 தொடர் வரும் 22-ம் தேதி கொல்கத்தாவில் தொடங்குகிறது. டி 20 தொடரின் 2-வது ஆட்டம் 25-ம் தேதி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த ஆட்டத்துக்கான டிக்கெட் விற்பனை நாளை (12-ம் தேதி) காலை 11 மணிக்கு தொடங்குகிறது. டிக்கெட் விற்பனை இணைதளம் வாயிலாக…

Erode:ஸ்டாலின் கேட்டுக்கொண்டதால் ஈரோடு கிழக்கில் காங் போட்டியில்லை! -செல்வப்பெருந்தகை திடீர் அறிக்கை | Congress decided to not contesting in Erode East by election

ஈரோடு கிழக்கு காங்கிரஸின் தொகுதி என்பதால் காங்கிரஸே மீண்டும் போட்டியிடும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், திடீரென ஈரோடு கிழக்குத் தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடவில்லை எனவும், முதல்வர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டதற்கு இணங்க திமுக ஈரோடு கிழக்கில் போட்டியிடும் என்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்திருக்கிறார்.அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வருகின்ற பிப்ரவரி 5ஆம் தேதி இடை தேர்தல் வரவிருப்பதை நாம் அனைவரும் அறிவோம், இந்த தொகுதியில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள்…

முதல் ஒருநாள் போட்டியில் இந்திய மகளிர் அணி வெற்றி | IND vs IRE, 1st W-ODI

இந்தியா – அயர்லாந்து மகளிர் அணிகள் இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி ராஜ்கோட்டில் நேற்று நடைபெற்றது. முதலில் பேட் செய்த அயர்லாந்து அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 238 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் கேபி லீவிஸ் 129 பந்துகளில், 15 பவுண்டரிகளுடன் 92 ரன்களும், லியா பால் 73 பந்துகளில், 7 பவுண்டரிகளுடன் 59 ரன்கள் சேர்த்தனர். இந்திய அணி சார்பில் பிரியா மிஷ்ரா 2 விக்கெட்களை வீழ்த்தினார். 239 ரன்கள்…

டொனால்ட் டிரம்ப்: நிபந்தனையின்றி விடுவிக்கப்பட்டது ஏன்? விசாரணையில் என்ன நடந்தது?

பட மூலாதாரம், Reuters10 ஜனவரி 2025, 15:46 GMTபுதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர்அமெரிக்க அதிபராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப், ஆபாசப்பட நடிகை ஸ்டோர்மி டேனியல்ஸை அமைதிப்படுத்த பணம் கொடுத்த வழக்கில் 34 குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளார்.தீர்ப்பை வழங்கும்போது, நீதிபதி மெர்ச்சன், “உங்கள் இரண்டாவது பதவிக் காலத்தில் வெற்றி பெற வாழ்த்துகிறேன்,” என்று கூறியுள்ளார்.டிரம்பை நிபந்தனையின்றி விடுவிக்க நீதிமன்றம் முடிவு செய்துள்ளது. அதாவது இந்த வழக்கில் அவர் எந்த அபராதமும் செலுத்த வேண்டியதில்லை, சிறைத் தண்டனையையும்…

2025-ல் தன் முதல் கோலை பதிவு செய்த ரொனால்டோ: அல் நசர் கிளப் வெற்றி! | ronaldo scored his first goal in 2025 al nassr won

ரியாத்: 2025-ல் தனது முதல் கோலை பதிவு செய்தார் கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. சவுதி அரேபியாவில் உள்ள அல் நசர் கிளப் அணிக்காக விளையாடிய போது இந்த கோலை அவர் பதிவு செய்தார். கிளப் மற்றும் தேசிய அளவில் இது அவரது 917-வது கோல். போர்ச்சுக்கல் கால்பந்து அணியின் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோவை கடந்த 2023-ல் ரூ.1,775 கோடிக்கு ஒப்பந்தம் செய்தது அல் நசர் கிளப் அணி. அவர் இந்த ஆண்டு ஜூன் வரையில்…