Chess : செஸ் விளையாட்டில் கோலோச்சும் இந்தியா; சாம்பியன்களின் தலைநகராகும் தமிழ்நாடு! | India leads on the international track of Chess Game
1988-ல் இந்தியாவின் முதல் கிராண்ட் மாஸ்டராக விஸ்வநாதன் ஜொலித்தார். அது நடந்து அடுத்த 12 ஆண்டுகளில், அதாவது 2000-ம் ஆண்டு மொத்தம் ஐந்து கிராண்ட் மாஸ்டர்களை இந்தியா பார்த்திருந்தது. அடுத்த 12 ஆண்டுகளில், 2012-ல் இது 29 ஆக இருந்தது. 2024-ல் இது 85 ஆக உயர்ந்திருக்கிறது. வியக்க வைக்கிறதல்லவா?! இப்போதுள்ள 85 கிராண்ட் மாஸ்டர்களில் 31 பேர், அதாவது 48% பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதிலேயே தெரியும் எந்தளவு ஆனந்தின் தாக்கம் இருந்திருக்கிறது என்பது. இந்தியாவில்,…









