“மகளுக்கு 1 கோடி பரிசு; தமிழ்நாடு அரசுக்கு நன்றி”- நெகிழும் காசிமாவின் அப்பா |kashima father mahaboob basha interview
“இந்தப் பரிசுத்தொகை மூலமா இத்தனைநாள் நாங்கப் பட்டக் கஷ்டம் எல்லாம் தீர்ந்துடுச்சுன்னு நினைக்கிறேன். ஷீட் போட்ட வாடகை வீட்லதான் குடியிருந்தோம். ஆட்டோ வாடகை, வீட்டு வாடகை, குடும்பச் செலவு, காசிமாவுக்கான போக்குவரத்து கட்டணம் எல்லாமே கடன் வாங்கித்தான் சமாளிச்சுட்டு வந்தோம். என் பொண்ணாலதான் எங்கக் குடும்பத்துக்கு இப்போ நல்லது நடந்திருக்கு. அவளுக்கு பயிற்சி கொடுத்ததுக்கு ரொம்ப பெருமைப்படுறேன். நாங்கப் பட்டக் கஷ்டம் எதுவும் வீண் போகல. குகேஷுக்கு மட்டும் 5 கோடி ரூபாய் பரிசு அறிவிச்சிருக்காங்க, காசிமாவுக்கு…