என்எல்சியை வெளியேற்ற கோரி இரண்டு நாள் நடைபயணம்: அன்புமணி அறிவிப்பு
சென்னை: என்.எல்.சி நிறுவனம் வெளியேற வலியுறுத்தி 2 நாள் நடைபயணம் மேற்கொள்ள உள்ளதாக பாமக தலைவர் அன்புமணி அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடலூர் மாவட்டத்தின் விளைநிலங்களையும், விவசாயிகளையும் என்.எல்.சி நிறுவனத்தின் நிலப்பறிப்பு முயற்சியிலிருந்து காப்பாற்ற வேண்டிய பெரும் தேவையும், கட்டாயமும் ஏற்பட்டுள்ளது. 25 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டால் அதனை வாழ்வாதாரமாகக் கொண்டிருக்கும் 17 ஆயிரம் குடும்பங்கள் பாதிக்கப்படும். இயற்கை வளங்களும் அழிந்துபோகும். என்.எல்.சி சுரங்க விரிவாக்கத்திற்காக நிலங்களைத் தருவதால் மக்களுக்கு எந்த…








