அதிமுகவினர் இடைத்தேர்தல் தோல்வியைக் கண்டு துவண்டு விடாமல் நம்பிக்கையோடு இருங்கள்; நல்ல தீர்வு விரைவில் வரும்: வி.கே. சசிகலா அறிக்கை..!
சென்னை: அதிமுகவினர் இடைத்தேர்தல் தோல்வியைக் கண்டு துவண்டு விடாமல் நம்பிக்கையோடு இருங்கள்; நல்ல தீர்வு விரைவில் வரும் என வி.கே. சசிகலா அறிக்கை வெளியிட்டுள்ளார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அமோக வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் தென்னரசு 43,981 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வி அடைந்தார். இந்நிலையில் அதிமுகவினருக்கு வி.கே. சசிகலா ஆறுதல் கூறினார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழ்நாட்டு மக்களும் அதிமுக ஒன்றுபடவேண்டும் என்று தான் விரும்புகிறார்கள்.…









