Dhoni: `இப்படியே பந்துவீசிக்கொண்டிருந்தால்…' சர்ப்ரைஸ் கொடுத்த பிட்ச்; பெளலர்களை எச்சரித்த தோனி!
சென்னை மற்றும் லக்னோ இடையேயான போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்திருந்தது. இந்தப் போட்டியில் சென்னை அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருந்தது.போட்டிக்குப் பிறகான பரிசளிப்பு விழாவில் வெற்றி குறித்து அகமகிழ்ந்த தோனி சில அதிருப்திகளையும் வெளிக்காட்டியிருந்தார்.தோனிதோனி பேசியவை, ‘இது ஒரு பெர்ஃபெக்ட்டான முதல் ஆட்டம். கடந்த ஐந்தாறு ஆண்டுகளில் இப்போதுதான் முதல் முறையாக மைதானம் நிரம்ப இத்தனை ரசிகர்கள் மத்தியில் சேப்பாக்கத்தில் ஆடியதில் மகிழ்ச்சி. இங்கேதான் பல நாட்களாக பயிற்சி செய்து வருகிறோம். ஆனால், பிட்ச்சை…









