Daily Archives: December 2, 2023

Happy Teeth: பெட் காபி, பிரஷ் செய்வதற்கு முன்பாக மாத்திரை… சரியா? தவிர்க்க வேண்டியவை என்ன? I Is it better to take the tablets before brushing?

பிரஷ் செய்வதற்கு முன்பாக காபி, டீ, உணவு என சாப்பிட்டால் பற்களில் கறை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். எனவே, பிரஷ் செய்வதற்கு முன்பாக பெட் காபி அருந்துவதைத் தவிர்த்துவிடுவது நல்லது.சிலருக்கு காலையில் வெறும் வயிற்றில் மாத்திரை போட வேண்டியதிருக்கும், அவர்கள் காலையில் எழுந்ததும் பிரஷ் செய்துவிட்டு மாத்திரை போடுவது நல்லது. இல்லையென்றால் வாயில் தேங்கியிருக்கும் எச்சில் மாத்திரை விழுங்கும்போது தண்ணீருடன் சேர்ந்து வயிற்றுக்குள் செல்லும். இதனால் வாய் துர்நாற்றம், பற்களில் கறை, எரிச்சலுணர்வு போன்றவை ஏற்படும். பிரஷ்…

Doctor Vikatan: நடிகர் விஜய்காந்த்துக்கு `ட்ரக்கியாஸ்டமி' சிகிச்சை… யாருக்கு, எப்போது தேவைப்படும்?

Doctor Vikatan: நடிகரும் அரசியல் தலைவருமான விஜய்காந்துக்கு சுவாசப் பிரச்னை இருப்பதாகவும் அதை குணப்படுத்த ட்ரக்கியாஸ்டமி என்ற சிகிச்சை செய்யப்பட்டதாகவும் கேள்விப்பட்டோம். ட்ராக்கியாஸ்டமி என்பது என்ன மாதிரியான சிகிச்சை…. அது யாருக்கு, எப்போது செய்யப்படும்?பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இன்டர்னல் மெடிசின் எக்ஸ்பெர்ட் டாக்டர் ஸ்பூர்த்தி அருண் மருத்துவர் ஸ்பூர்த்தி அருண் | சென்னை Doctor Vikatan: மரவள்ளிக் கிழங்கு சாப்பிட்டால் கணையத்தில் கல் உருவாகுமா?’ட்ரக்கியா’ என்றால் காற்றுக் குழாய், அதாவது சுவாசக்குழாய்…இந்தக் குழாயில் சிறிய துளை போட்டு, ஒரு டியூபை செருகி, சுவாசத்தை முறைப்படுத்தச் செய்வார்கள்.…

குடி போதையில் தகராறு, மூளைக்குள் சென்ற சாப்ஸ்டிக்கை… மருத்துவர்கள் அதிர்ச்சி! I Chopstick found inside human brain

வியட்நாமைச் சேர்ந்த 35 வயதான ஒருவர் கடுமையான தலைவலியால் அவதிப்பட்டு வந்தார். மருத்துவமனைக்குச் சென்று பார்த்தபோது அவரின் மூளையில் சாப்ஸ்டிக் (chopstick) இருப்பது கண்டறியப்பட்டது. இரண்டு துண்டுகளாக உடைந்த நிலையில் சாப்ஸ்டிக் மூளையில் இருந்தது.சாப்ஸ்டிக்ஐந்து மாதங்களாகக் கடும் தலைவலி, மூக்கிலிருந்து நீர் வடியும் அறிகுறிகளுடன் மருத்துவமனைக்குச் சென்றுள்ளார் அந்த நபர். சி.டி ஸ்கேன் செய்த பிறகு, `மூளையில் அரிதான ஒரு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது மிகவும் ஆபத்தான பிரச்னை’ என்று தெரிவித்துள்ளனர். ஆனால், எதனால் அந்தப் பிரச்னை…

70 வயதில் இரட்டைக் குழந்தைகளை பிரசவித்த பெண்… “குழந்தை இல்லாததால் கேலிக்கு உள்ளானேன்” என உருக்கம் |70 year old Uganda woman gave birth to twins

சஃபினா நமுக்வயா (Safina Namukwaya) என்ற பெண்ணுக்கு 70 வயதாகிறது. இவருக்கு உகாண்டாவின் தலைநகரான கம்பாலாவில் உள்ள கருத்தரிப்பு மையத்தில் IVF சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் கருத்தரிப்பு மையத்தில் சிசேரியன் மூலம் ஓர் ஆண் மற்றும் பெண் குழந்தையை புதன்கிழமையன்று பெற்றெடுத்தார். இவருக்கு 2020-ல் பெண் குழந்தை பிறந்தது. இது இவரின் இரண்டாவது பிரசவம்.  செயற்கை கருவுறுதல்கோப்புப் படம் பொதுவாகப் பெண்களுக்கு 45 முதல் 55 வயதுக்குள் மாதவிடாய் நின்றுவிடும். இந்த நேரத்தில் கருவுறுதலுக்கான வாய்ப்புகள் குறைகிறது; ஆனால் மருத்துவத்தில்…