ஈரோடு: மின் கசிவு… ஷட்டரில் பாய்ந்த மின்சாரம் – கடையைத் திறந்த மாணவருக்கு நேர்ந்த சோகம்
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வடக்கு பேட்டையைச் சேர்ந்தவர் சண்முகராஜா. இவரின் மகன் பிரவீன் (14). கொடிவேரியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வந்தார். தற்போது பள்ளி விடுமுறை என்பதால், வடக்கு பேட்டை பகுதியில் உள்ள தந்தையின் மளிகைக் கடைக்குச் சென்று அவருக்கு பிரவீன் உதவி செய்து வந்தார். வழக்கம்போல் திங்கள்கிழமை காலை பிரவீன் மளிகைக் கடையை திறந்துள்ளார். அப்போது, மின்கசிவு காரணமாக கடையின் ஷட்டரில் மின்சாரம் பாய்ந்து இருந்தது. இது தெரியாத பிரவீன்…



