ஸ்டாலினை பதவி விலக சொல்லும் அருகதை எடப்பாடிக்கு இல்லை
ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு விவகாரத்திற்கு பொறுப்பேற்று எடப்பாடி பழனிச்சாமி பதவி விலகியிருந்தால், கள்ளச்சாராய விவகாரத்தில் ஸ்டாலினை பதவி விலக சொல்லும் அருகதை அவருக்கு இருந்திருக்கும் என டி.டி.வி தினகரன் விமர்சித்துள்ளார்.மதுரை பெத்தானியாபுரம் பகுதியில் அமமுக கட்சி கொடியை அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் ஏற்றி வைத்தார். தொடர்ந்து திறந்தவெளி வேனில் அவர் பேசுகையில்,”அமமுகவை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது. சில சுயநலவாதிகளை விலை கொடுத்து வாங்கலாம். ஆனால், என்னுடன் அணி திரண்டு இருப்பவர்களை யாராலும் அசைக்க முடியாது. 2026ல்…









