அரசு அலுவலகத்தில் நடந்த அகோரி பூஜை… எஸ்.பி அலுவலகத்தில் புகார்..!
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் நகராட்சியில் நிர்வாண அகோரியை அழைத்து வந்து அரசு அலுவலகத்தில் பூஜை நடத்தியவர்கள் நடவடிக்கை எடுக்க திவிக வலியுறுத்தியுள்ளது.திருப்பூர் மாவட்டம் காங்கேயம் நகராட்சியில் ஆண் பெண் இருபாலரும் பணிபுரிந்து வரக்கூடிய சூழலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, காங்கேயம் நகராட்சி அரசு அலுவலகத்தில் அகோரியை வைத்து பூஜை நடத்தப்பட்டுள்ளதாக, கூறப்படுகிறது.இதுதொடர்பாக திராவிடர் விடுதலை கழகத்தினர் திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அளித்துள்ள மனுவில், “பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் விதமாகவும் பொதுமக்கள் கூடும் இடத்தில்…






