டெல்லி: 30 குழந்தைகளை கடத்தி பாலியல் வன்கொடுமை; கொலை – குற்றவாளி அளித்த அதிர்ச்சி வாக்குமூலம்!
உத்திரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் ரவீந்தர் குமார். இவரின் தந்தை தினக்கூலியாக பணியாற்றிவந்திருக்கிறார். ரவீந்தர் குமாரின் தாயார் வீட்டு வேலை செய்துவந்திருக்கிறார். 6-ம் வகுப்பு வரை படித்த ரவீந்தர் குமார் படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டு வேலைக்குச் செல்ல தொடங்கியிருக்கிறார். இதற்கிடையில், பெடோபிலியா (paedophilia) எனும் சிறு குழந்தைகளின் மீது ஆசை கொள்ளும் மனநோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார். சிறுவர்கள்இந்த நிலையில்தான், ரவீந்தர் குமார் சிறுவர்-சிறுமிகளைக் கடத்தி பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்யத் தொடங்கியிருக்கிறார். இது குறித்துப் பேசிய கூடுதல் ஆணையர் விக்ரம்ஜித் சிங், “ரவீந்தர் குமார் ஒரு நாளைக்கு 40 கிலோமீட்டர் தூரம் நடந்து அவனுக்கு விருப்பமான குழந்தையைக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்து வந்திருக்கிறான். இந்த…







