ஆம்புலன்ஸ் தர மறுத்த மருத்துவமனை; ரயிலுக்காகக் காத்திருந்து மரத்தடியில் பரிதாபமாக உயிரிழந்தப் பெண்! | Woman Dies At Bengal Railway Station As Hospital Fails To Provide Ambulance
மேற்கு வங்கத்தில், மருத்துவமனை நிர்வாகம் ஆம்புலன்ஸ் தராததால், ரயிலுக்காக மரத்தடியில் காத்திருந்த 50 வயது பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.உயிரிழந்த பெண், மேனகா கோடா எனத் தெரியவந்திருக்கிறது. இவருடைய கணவர் ஒரு தினக்கூலித் தொழிலாளியாவார். இப்படியான சூழலில் கச்சிகோரியா கிராமத்தில் தன்னுடைய கணவருடன் வயலில் வேலை பார்த்துக்கொண்டிருந்த மேனகா கோடாவுக்கு திடீரென வெப்ப வாதம் (heat stroke) ஏற்பட்டிருக்கிறது.அவசர சிகிச்சைஉடனடியாக அவரின் கணவர், தன்னுடைய மனைவியுடன் பதார் மருத்துவமனைக்குச் சென்றார்.…








