அதிமுக-பாஜக கூட்டணி உடைகிறதா?.. எடப்பாடி பழனிசாமிக்கு அண்ணாமலை ஆதரவாளர் கடும் கண்டனம்..!
சென்னை: பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு எதிராக போர்க்கொடி தூக்கி அடுத்தடுத்து நிர்வாகிகள் வெளியேறுவதால் அக்கட்சியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. அண்ணாமலை மீது சரமாரியாக குற்றச்சாட்டுகளை முன்வைத்து, பாஜக ஐ.டி. விங் தலைவராக இருந்த நிர்மல் குமார் அக்கட்சியில் இருந்து நேற்று விலகினார். எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்த அவர், அண்ணாமலை சொந்தக் கட்சியினரையே வேவு பார்ப்பதாக குற்றம்சாட்டினார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது கட்சி நிர்வாகிகளையே உளவு பார்த்து ஆனந்தமடைகிறார். பாஜக தலைமையகமான கமலாலயத்தில்…








