தமிழக அரசால் எழுதிக் கொடுத்ததுதான் ஆளுநரின் உரை என்பது சொந்த உரை அல்ல: கனிமொழி எம்பி பேச்சு
தண்டையார்பேட்டை: ராயபுரம் பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் திமுக மகளிர் அணி சார்பில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது. விழாவிற்கு மாநில மகளிர் அணி இணை செயலாளர் குமரி விஜயகுமார் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மாநில திமுக துணை பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி எம்பி கலந்துகொண்டார். பெண்களின் நடன நிகழ்ச்சியும் நடந்தது. நிகழ்ச்சியில் கனிமொழி எம்பி பேசியதாவது: இந்த பொங்கல் புதுப்பொலிவுடன் விடிந்திருக்கிறது. எதிர்கட்சிகள் வெளிநடப்பு செய்ததை பார்த்திருக்கிறோம். ஆனால் ஆளுநரையே வெளிநடப்பு…









