Daily Archives: January 6, 2023

Axar Patel: கிடைக்கும் வாய்ப்புகளிலெல்லாம் ஸ்கோர் செய்யும் `ஆட்டநாயகன்' அக்ஸர் படேல்!

இலங்கைக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா, பந்து வீச்சைத் தேர்வு செய்தார். முதலில் ஆடிய இலங்கை அணி, 6 விக்கெட் இழப்பிற்கு 206 ரன்கள் எடுத்தது. 207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது இந்திய அணி. முதல் 10 ஓவர்களிலேயே ஐந்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறி நிலையில் அடுத்து களம் இறங்கிய அக்ஸர் படேல் அதிரடியாக சிக்ஸர்களை விளாசினார். அக்ஸர் படேலும் சூரியகுமார் யாதவும்…

இந்த பிரச்சனை இருக்கவங்க தக்காளி விதையை உணவில் சேர்த்துக்கொள்ள கூடாதாம்..! மீறினால் ஆபத்து..!

அதாவது, செரிமான பிரச்சனைகள், அசிடிட்டி போன்ற பிரச்சனைகளால் நீண்ட நாட்களாக அவதிப்படுபவர்களுக்கு இது சிறிய அளவில் இருந்தாலும் நம் உடலுக்கு நச்சுத்தன்மை வாய்ந்தது. எனவே நீங்கள் இந்த பிரச்சனையில் இருந்தால், பச்சை தக்காளி சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. அதே நேரத்தில், நீங்கள் சமைக்கும் போது விதைகளை நீக்கிவிட்டு சமைப்பது நல்லது. இல்லையெனில், செரிமான பிரச்சனைகளுடன் நெஞ்செரிச்சல் போன்ற கடுமையான பிரச்சனைகள் தோன்றும், அதனுடன் மற்ற வழிகளில் உடல் அசௌகரியத்தை சந்திக்கும். நன்றி

பிளஸ் 2 மாணவர்களுக்கு வரும் 9-12 ம் தேதிக்குள் மின்னஞ்சல் முகவரி உருவாக்க வேண்டும்: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

சென்னை: பிளஸ் 2 மாணவர்களுக்கு வரும் 9-12 ம் தேதிக்குள் மின்னஞ்சல் முகவரி உருவாக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவு அளித்துள்ளது. உயர்கல்வி சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் உரிய தகவல்களை பெற மின்னஞ்சல் முகவரி ஏற்படுத்த ஆணை பிறப்பித்துள்ளது. மாணவர்களுக்கு கல்லூரிகள் மின்னஞ்சல் வாயிலாகவே தகவல்கள் அனுப்பும் என்பதால் உயர்கல்வித்துறை உத்தரவு அளித்துள்ளது.  Source link

தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தை மீறுவதா? பிரதமர் மோடிக்கு கே.எஸ்.அழகிரி கண்டனம்

சென்னை: தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை மீறுவதை மோடி அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் என்று கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தேசிய உணவு பாதுகாப்புச் சட்டப்படி, பிரதமரின் ஏழைகளுக்கான உணவுத் திட்டத்தில், கடந்த 2 ஆண்டுகளாக 10 கிலோ உணவு தானியங்களைப் பெற 81 கோடி இந்தியர்கள் தகுதி பெற்றிருந்தனர். ஆனால், தற்போது அவர்கள் 5 கிலோ உணவு தானியங்களை மட்டுமே பெற முடியும். வழக்கம் போல்…

ஆண்களின் விந்தணுக்களின் தரத்தை பாதித்த கோவிட் தொற்று; ஆய்வில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட ஆண்களின் விந்தணுக்களின் தரம் பாதிக்கப்படுவதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இந்தியா முழுவதிலும் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை ஆராய்ச்சியாளர்கள், அக்டோபர் 2020 முதல் ஏப்ரல் 2021 வரை, எய்ம்ஸ் பாட்னா மருத்துவமனையில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட 19 முதல் 45 வயதுக்குட்பட்ட 30 ஆண்களைத் தேர்ந்தெடுத்து சோதனையை மேற்கொண்டனர். Representational Imageகோவிட்-19 தோற்றம்: தரவுகளைக் கேட்ட உலக சுகாதார நிறுவனம்; பதிலளிக்குமா சீனா? அவர்களிடமிருந்து விந்தணுக்கள் சேகரிக்கப்பட்டு முதல் சோதனை நடத்தப்பட்டது. இரண்டாவது சோதனை 74…

கடைசி ஓவரை தானே வீசி பாண்டியாவுக்கு பாடம் கற்பித்த ஷனகா… அர்ஷ்தீப் சிங்கின் ‘நோ பால்’கள் – ஓர் அலசல் | India vs Sri lanka t20 series analysis

முதல் டி20 போட்டியில் கடைசி ஓவரை தான் வீசாமல் அக்சர் படேலிடம் கொடுத்து தப்பித்த ஹர்திக் பாண்டியா, 2-வது டி20 போட்டியிலும் தன்னை பாதுகாத்துக் கொள்ளும் படியாக 2 ஓவர்களை மட்டுமே வீசி 4 ஒவர்களை பூர்த்தி செய்யாமல் விட்டார். இதனால் மற்ற பவுலர்கள் செம அடி வாங்கியதில் இந்தியா தோற்றது. மாறாக, இலங்கை கேப்டன் ஷனகா கடைசி ஓவரில் இந்தியாவுக்கு தேவை 20 ரன்கள் என்ற நிலையில், தானே வீசி 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி வெறும்…

Doctor Vikatan: உணவுகளுக்கும் உயர் ரத்த அழுத்தத்துக்கும் தொடர்புண்டா? | Doctor Vikatan: Is diet and high blood pressure related?

சில வகை உணவுகள் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும். உதாரணத்துக்கு பொட்டாசியம் உள்ள உணவுகள். பிபியைக் குறைக்க மருத்துவர்கள் பொட்டாசியம் லிக்விட் கொடுப்பதைப் பார்க்கலாம். உருளைக்கிழங்கு, கீரை, கொத்தமல்லி போன்றவற்றிலும், ஆப்பிள் தவிர்த்த அனைத்துப் பழங்கள், வெள்ளரிக்காய் தவிர்த்த அனைத்து காய்கறிகளிலும் பொட்டாசியம் இருக்கிறது. அதற்கேற்ப காய்கறிகள், பழங்களைச் சாப்பிடலாம்.ரெடிமேடு குளிர்பானங்கள், ரெடிமேடு குளிர்பான மிக்ஸ், இன்ஸ்டன்ட் டிரிங்க்ஸ், அப்பளம், சிப்ஸ், வடாம், ஊறுகாய் போன்றவற்றில் உப்பு அதிகமாக இருக்கும். உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் இவற்றைத் தவிர்க்க…

570 வீடுகளில் விரிசல்… பாதுகாப்பற்ற வீடுகளில் வசிக்கும் உத்தரகாண்ட் மக்கள்!

உத்தரகாண்ட் மாநிலம் இமயமலை பகுதியில் அமைந்துள்ள ஜோஷிமத் நகரம், கடலில் இருந்து 6 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இங்கு அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் அபாயம் உண்டு. இப்பகுதியில் ஏற்பட்ட தொடர் நிலச்சரிவால், 570 வீடுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது. பல வீடுகள் புதைந்து வருகின்றன.உத்தரகாண்ட் முதல்வர் – புஷ்கர் தாமி10 ரூபாய் நாணயம் வாங்க மறுப்பு; வங்கி அதிகாரிகள் சஸ்பெண்ட்!நிபுணர்களின் அறிக்கையைப் பெற்று, அதற்கான திட்டத்தைத் தயாரித்த பின்னர், பாதிக்கப்பட்ட பகுதியை அம்மாநிலத்தின் முதல்வர் புஷ்கர் சிங் தாமி…

அரசுக்கு ஜி.கே.வாசன் வலியுறுத்தல் நேரடி நெல்கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும்

சென்னை: தமிழக அரசு, நேரடி நெல்கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும் என தமாகா தலைவர் ஜி.கே. வாசன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை; டெல்டா மாவட்டப்பகுதிகளில் சுமார் 10 ஆயிரம் ஹெக்டேர் பரப்பு விளைநிலங்களில் நெற்பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் சம்பா நெற்பயிரை நம்பி இருக்கிறார்கள். எனவே தமிழக அரசு, சம்பா நெற்பயிர் அறுவடை செய்யும் இக்காலத்தில் கடின உழைப்பை மேற்கொண்ட விவசாயிகளின் பொருளாதார நிலையை கவனத்தில் கொண்டு,…

“நுங்கு, குலோப் ஜாமூன் பற்றியெல்லாம் பேசியது ஏன்?” – டாக்டர் ஷர்மிகா விளக்கம்| Doctor sharmika saran interview

செய்தி வெளியாவதற்கு முன்பே டாக்டர் ஷர்மிகாவிடம் விளக்கம் கேட்க தொடர்புகொண்டபோது அதுகுறித்து, பேச மறுத்துவிட்டார். ஆனால், தற்போது நம்மை தொடர்புகொண்டு பேசினார் டாக்டர் ஷர்மிகா.“சித்த மருத்துவம் மக்களுக்கு போய் சேரணும்ங்குற நல்ல நோக்கத்துலதான் தொடர்ந்து நான் விழிப்புணர்வூட்டிக்கிட்டு வர்றேன். ஆனா, நான் டாக்டரே இல்லை என்பதுபோல் பரப்பிவருகிறார்கள். நான், சென்னையிலுள்ள தனியார் சித்த மருத்துவக்கல்லூரியில்தான் பி.எஸ்.எம்.எஸ் எனப்படும் சித்த மருத்துவப் பட்டப்படிப்பு படித்துள்ளேன். சென்னை அரும்பாக்கம் அறிஞர் அண்ணா அரசு மருத்துவமனை வளாகத்திலுள்ள சித்தா மருத்துவ கவுன்சிலில்…