கொளத்தூரில் ரூ.111.80 கோடியில் புதிய அடுக்குமாடி குடியிருப்பு திறப்பு ஏழையின் சிரிப்பில் கலைஞரை காண்கிறேன்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
பெரம்பூர்: ஏழையின் சிரிப்பில் கலைஞரை காண்கிறேன் என கொளத்தூரில் நடைபெற்ற புதிய அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடங்கள் திறப்பு நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். தமிழக முதல்வரும், கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினருமான மு.க.ஸ்டாலின் நேற்று மாலை கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு வருகை தந்து பல்வேறு திட்ட பணிகளை துவக்கி வைத்தார். முதலாவதாக கொளத்தூரில் இயங்கி வரும் கபாலீஸ்வரர் கல்லூரி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையை தனது சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் வழங்கினார். இதனைத் தொடர்ந்து சென்னை குடிநீர் வழங்கல் மற்றும்…









