அனைவரும் தமிழராய் எழுவதே திராவிட மாடல் ஆட்சியின் நோக்கம் சிறுபான்மையினர் முயற்சிகளுக்கு தமிழக அரசு துணை நிற்கும்: பீட்டர் அல்போன்சுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
சென்னை: அனைவரும் தமிழராய் எழுவதே திராவிட மாடல் ஆட்சியின் நோக்கம். சிறுபான்மையினர் எடுக்கும் முயற்சிகளுக்கு தமிழக அரசு துணை நிற்கும் என்று சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்சுக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடித்தில் கூறியுள்ளார். தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்சுக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையம், ‘தேசிய சிறுபான்மையினர் உரிமைகள் நாளினை’ வரும் 18ம்தேதி மதுரை அமெரிக்கன் கல்லூரி வளாகத்தில், சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான்…









