Daily Archives: December 22, 2022

Doctor Vikatan: சருமத்துக்கும் கூந்தலுக்கும் தினமும் கற்றாழை ஜெல் பயன்படுத்துவது சரியா? | Doctor Vikatan – Is it ok to use aloe vera gel daily for skin and hair?

Doctor Vikatan: தினமும் கூந்தலுக்கும் சருமத்துக்கும் கற்றாழை ஜெல் பயன்படுத்தலாமா? ரெடிமேடு ஜெல் பயன்படுத்தலாமா அல்லது கற்றாழைச் செடியிலிருந்து பறித்துதான் பயன் படுத்த வேண்டுமா? எப்படிப் பயன்படுத்த வேண்டும்?பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த அரோமாதெரபிஸ்ட் கீதா அஷோக்.கீதா அஷோக்தினமும் சருமத்துக்கு கற்றாழை ஜெல் பயன்படுத்தலாம். ஆனால், அத்துடன் சில துளிகள் ஆல்மண்டு ஆயில் கலந்து பயன்படுத்த வேண்டும். கற்றாழை ஜெல் நச்சுத்தன்மை மிக்கது. அதனால் அதை நேரடியாகப் பயன்படுத்துவதைவிட இரண்டு சொட்டுகள் ஆல்மண்டு ஆயில் கலந்து பயன்படுத்துவதே…

சரசரவென கூடிய 50 லட்சம் ரசிகர்கள்.. அர்ஜெண்டினா பஸ்ஸுக்குள் குதித்த ரசிகர்.. ஹெலிகாப்டரில் தப்பிய மெஸ்ஸி..

அர்ஜென்டினா கால்பந்து அணி வீரர்களின் வெற்றி கொண்டாட்ட பேரணியில் பல லட்சக்கணக்கானோர் குவிந்த நிலையில், மெஸ்ஸி உள்ளிட்ட வீரர்கள் ஹெலிகாப்டரில் அப்புறப்படுத்தப்பட்டனர்.ஃபிஃபா உலகக் கோப்பையை வென்று நாடு திரும்பிய அர்ஜென்டினா அணிக்கு தலைநகர் பியூனஸ் அயர்சில் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது. விமான நிலையத்தில் இருந்து திறந்த பேருந்தில் மெஸ்ஸி உள்ளிட்ட வீரர்கள் பயணித்த நிலையில், வழி நெடுகிலும் 50 லட்சத்திற்கும் மேற்பட்டோர் திரண்டு உற்சாக வரவேற்பளித்தனர்.Lionel #Messi and team were evacuated in helicopters after…

உலகையே ஆட்டிப்படைத்த `பிகினி கில்லர்’ – இந்தியா டு நேபாள் சிறை; விடுதலை ஆகும் சோப்ராஜ் – யார் இவர்? | Charles Sobhraj freed by Nepal: The life and crimes of the ‘Bikini killer’

செல்வந்தர்களிடம் பேசி நட்பாக்கிக் கொள்ளும் சோப்ராஜ், அவர்களை கொலை செய்து சொத்துகளை அபகரிப்பதை வாடிக்கையாக வைத்திருந்தான். மும்பையில் இவனின் கொலை, கொள்ளைகளுக்கு பார்ட்னராக பார்பரா, மேரி ஹெலன் ஆகிய இரு ஐரோப்பியப் பெண்கள் இருந்தனர். அவர்களுடன் சேர்ந்து டெல்லி சென்ற சோப்ராஜ், அங்கு சுற்றுலா வந்த பிரெஞ்சு மாணவர்களுக்கு பேதி மாத்திரை கொடுத்து கொள்ளையடிக்க முயன்று போலீஸில் சிக்கினான்.சார்லஸ் சோப்ராஜ்ட்விட்டர்ஐரோப்பிய பெண்கள் அப்ரூவராக மாற… திகார் சிறையில் அடைக்கப்பட்டான். திகார் சிறையில் செல்வாக்குடன் இருந்தவன், 1984-ம் ஆண்டு…

அதிமுக எங்களுக்கு தான் சொந்தம்; கட்சி நிதியில் கை வைத்தால் சட்ட நடவடிக்கை பாயும்: ஓ.பன்னீர்செல்வம் எச்சரிக்கை

சென்னை: அதிமுக கட்சி நிதியை கையாடல் செய்தால் சட்டரீதியாக நடவடிக்கை எடுப்போம் என்று ஓ.பன்னீர்செல்வம் எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னை, வேப்பேரியில் ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டம் முடிந்த பின்பு ஓபிஎஸ் நிருபர்களிடம் கூறியதாவது:அதிமுகவில் இப்பொழுது நிலவக்கூடிய இந்த சூழல் யாரால் செயற்கையாக உருவாக்கப்பட்டது. தேர்தலின்போது எம்ஜிஆர், ஜெயலலிதா எப்படி கட்சியை வைத்திருந்தார்களோ, அந்நிலையில் கட்சியை காப்போம். நான் பொருளாளராக இருக்கும்போது அளித்த கணக்கை தான் தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டுள்ளது.…

சீனாவில் அதிகரிக்கும் கோவிட், நிரம்பும் மருத்துவமனைகள்; இந்தியா என்ன ஆகும்? – மருத்துவர் விளக்கம்

உலகை அச்சுறுத்தி மிரட்டி, ஆட்டம் காணச் செய்த கோவிட் தொற்று, அது தோன்றிய நாடாகக் கருதப்படும் சீனாவில் மீண்டும் தலைதூக்கியுள்ளது. சில நாள்களுக்கு முன்பு எரிக் ஃபீகல் டிங் எனும் அமெரிக்க கொள்ளைநோயியல் நிபுணர் தனது ட்விட்டர் பக்கத்தில், சீனாவின் மருத்துவமனைகளில் சுவாசக் கருவிகளில் பலரும் மூச்சுத் திணறலுடன் இருப்பதையும், பிணங்கள் குவியலாக இருப்பதையும் காணொளிகளாக பகிர்ந்திருந்தார். அப்போதிலிருந்து, மீண்டும் இதுபோன்ற நிலை இந்தியாவிலும் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம் பலருக்கும் இருக்கிறது. அந்த அச்சம் அவசியமா, அவசியமற்றதா?…

பழங்களை சாப்பிடும்போது நாம் செய்யும் மிகப்பெரிய தவறுகள் இதுதான்..!

தர்பூசணி, முலாம்பழம், வெள்ளரி, ஆரஞ்சு மற்றும் ஸ்ட்ராபெர்ரி போன்ற அதிக நீர் சத்து கொண்ட பழங்களை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்க கூடாது. நன்றி

சீன கொரோனா திரிபு அறிகுறியுடன் இந்தியாவில் மூன்று பேர் – உஷார் ஆகும் மாநில அரசுகள் – 10 தகவல்கள்

பட மூலாதாரம், Getty Images8 மணி நேரங்களுக்கு முன்னர்ஓமிக்ரான் துணை திரிபான BF.7 அறிகுறியுடன் மூன்று பேர் இந்தியாவில் இருப்பதாக வெளிவரும் தகவல்களால் இந்தியாவில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் இந்திய சுகாதார அமைச்சகத்தால் உஷார்படுத்தப்பட்டுள்ளன. இந்த வகை திரிபு, சீனாவின் தற்போதைய கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கையை அதிகரிக்க காரணமாகியிருக்கிறது. இதனால் அங்கு சில நகரங்களில் கொரோனா வழிகாட்டுதல்கள் மற்றும் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், அதே திரிபு அறிகுறியுடன் இந்தியாவிலும் மூன்று பேர்…

எம்ஜிஆர் உருவாக்கிய கட்சியை அழிக்க நினைக்கும் எடப்பாடிக்கு தொண்டர்கள் பாடம் புகட்ட வேண்டும்: மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தலைவர்கள் பேச்சு

சென்னை: எம்ஜிஆர் உருவாக்கிய கட்சியை அழிக்க நினைக்கும் எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுக தொண்டர்கள் பாடம் புகட்ட வேண்டும் என்று மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தலைவர்கள் பேசினர். ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் நேற்று சென்னையில் நடைபெற்ற அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தலைவர்கள் பேசியதாவது:அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன்: நான்  ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரிப்பதற்கு மூன்று காரணம். ஒன்று ஜெயலலிதா,  யாரையாவது தன்னுடைய வாழ்நாளில் அரசியல் வாரிசாக அடையாளம் காட்டினார்  என்றால் ஓபிஎஸ்சைதான். அவர் ஒரு விழாவுக்கு செல்ல முடியவில்லை என்றால், …

கோவிட் தொற்று அதிகரித்து வரும் சீனாவில் எலுமிச்சை பழங்களுக்கு டிமாண்ட்… என்ன காரணம்? |high demand for lemon in covid affected china

சீனாவில் எலுமிச்சைப் பழங்களை மக்கள் தேடி வாங்க ஆரம்பித்துள்ளனர். ஏன் இப்படிச் செய்கிறார்கள் என்று பார்த்தபோதுதான், அங்கு மீண்டும் கோவிட் தொற்று ஆதிக்கம் செலுத்துவதுதான் காரணம் என்று தெரிய வந்துள்ளது. தொற்றுக்கு இந்த முறை மருந்துகள், மாத்திரைகள், மருத்துவமனைகள் மட்டும் அல்லாமல், மக்கள் இயற்கையான வழிமுறைகளிலும் நோயைக் கட்டுப்படுத்த முயற்சி செய்து வருகின்றனர். கொரோனா தடுப்பூசிஎலுமிச்சைப் பழம் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்று நம்பும் சீன மக்கள், மார்க்கெட்டுக்கு வரும் புதிய பழங்களை அப்படியே வாங்கிவிடுகின்றனர். அதிக…