Daily Archives: December 6, 2022

தமிழகத்திற்கு ஆளுநர் தேவையில்லை; வாக்குக்காக அம்பேத்கர் புகழ்பாடும் பாஜக: சீமான் பேட்டி

சென்னை: வாக்குக்காக மட்டுமே அம்பேத்கர் பற்றி பாஜக பேசி வருகிறது என்று சீமான் விமர்சனம் செய்துள்ளார். சட்ட மேதை அண்ணல் அம்பேத்கரின் 66வது நினைவு தினம் நாடு முழுவதும் இன்று அனுசரிக்கப்படுகிறது. அம்பேத்கரின் நினைவு நாளையொட்டி சென்னையில் உள்ள அம்பேத்கர் நினைவு மண்டபத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; வாக்குதான் காரணம், எந்த அளவிற்கும் பாஜக செல்லும். வல்லபாய் பட்டேலுக்கு எதற்காக ரூ.3,000 கோடியில்…

FIFA WC 2022 | கோல் மழை பொழிந்த பிரேசில் வீரர்கள் – தென் கொரியாவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேற்றம்

தோகா: கத்தாரில் நடைபெறும் 22-வது உலகக் கோப்பை கால்பந்து தொடரில் இன்று பிரேசில், தென் கொரியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த ஆட்டம் தோகாவிலுள்ள ஸ்டேடிடம் 974-ல் நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெற்றது. காயத்தால் ஓய்வில் இருந்த பிரேசில் அணியின் கேப்டன் மற்றும் நட்சத்திர வீரர் நெய்மர் இப்போட்டியில் களம்கண்டார். ஆட்டத்தின் தொடக்கம் முதலே பிரேசில் அதிரடியை கையாண்டது. சொல்லப்போனால் கோல் மழை பொழிந்தனர் எனலாம். முதல் கோலை வினி ஜூனியர் அடித்தார். அவர் ஆட்டத்தின் 7வது…

குளிருக்கு இதமாக புரோட்டின் நிறைந்த சூடான சூப்கள் குடிக்க ஆசையா.! ரெசிபிக்கள் இதோ

சில்லி பீன்ஸ் சூப் : பீன்ஸ் விதைகளை இரவு முழுவதும் ஊற வைத்து, காலையில் அதனை குக்கரில் வேகவைத்து வடித்துக் கொள்ளவும். ஒரு கடாய் எடுத்து, அதில் ஒரு டேபிள் ஸ்பூன் அளவு நல்லெண்ணெய் சேர்த்து, சிறிதளவு இஞ்சி பூண்டு பேஸ்ட், நறுக்கிய வெங்காயம், 3 அல்லது 4 பச்சை மிளகாய், நறுக்கிய தக்காளி, உப்பு மற்றும் மிளகுத்தூள் ஆகியவற்றை சேர்த்து வதக்கவும். வதங்கிய பின்னர் அதனுடன் பீன்ஸ் விதை, ஊட்டி மிளகாய் போன்றவற்றை சேர்த்து தேவையான…

10% இடஒதுக்கீடு: உச்சநீதிமன்ற தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி திமுக மனு – 10 தகவல்கள்

பட மூலாதாரம், Getty Images9 மணி நேரங்களுக்கு முன்னர்பொருளாதாரத்தில் பின்தங்கிய பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் 103ஆம் அரசியலமைப்பு திருத்தம் செல்லும் என்று உறுதிப்படுத்தி உச்ச நீதிமன்றம் கடந்த நவம்பர் 7ஆம் தேதி அளித்த தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரும் மனுவை இந்திய உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாட்டில் ஆளும் திமுக தாக்கல் செய்துள்ளது. இந்த மனு தாக்கல் செய்யப்பட்ட தகவலை மாநிலங்களவை திமுக உறுப்பினரும் வழக்கறிஞருமான வில்சன் பிபிசியிடம் உறுதிப்படுத்தினார். முக்கியத்துவம்…

சத்துணவு திட்டத்தில் தற்போதைய நிலையே தொடர அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: பாமக தலைவர் அன்புமணி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஓரிடத்தில் சத்துணவு தயாரித்து 3 கி.மீ சுற்றளவில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் வழங்கப்படும் போது, உணவு தயாரிக்கப்படும் பள்ளியைத் தவிர மற்ற இடங்களில் உள்ள சத்துணவு மையங்கள் மூடப்படும். அதனால் அங்கு பணியாற்றிய சத்துணவு அமைப்பாளரும், சமையலர்களும் வேலை இழக்க நேரிடும். தமிழ்நாட்டில் இன்றைய நிலையில் 43,190 பள்ளிகளில் சத்துணவு மையங்கள் உள்ளன. அவற்றில் சுமார் 1.29 லட்சம் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். புதிய திட்டம்…

Tamil News Live: 10% இடஒதுக்கீடு: திமுக சார்பில் மறு சீராய்வு மனு தாக்கல்!

Latest Tamil News: செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் தெரிந்துக்கொள்ள நியூஸ் 18 தமிழுடன் இணைந்திருங்கள் Source link

ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்துவதில் சசிகலா, டிடிவி தினகரன் மோதல் வெட்டவெளிச்சமானது

சென்னை: ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் சசிகலா, டிடிவி தினகரன் தனித்தனியாக ஊர்வலம் நடத்தியதோடு, தன்னுடைய ஆதரவாளர்கள் யாரும் சசிகலாவை சந்திக்கக் கூடாது என்று டிடிவி உத்தரவிட்டதால், சசிகலா கடும் அதிர்ச்சியும், அதிருப்தியும் அடைந்துள்ளார். ஜெயலலிதாவின் நினைவு நாள் நேற்று கடைப்பிடிக்கப்பட்டது. அதில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் தனித்தனியாக சென்று ஜெயலலிதா சமாதியில் அஞ்சலி செலுத்தினர். சசிகலாவும், டிடிவி தினகரனும் ஒன்றாக அஞ்சலி செலுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இருவரும் தனித்தனியாக…