Daily Archives: November 28, 2022

ஈரோடு: அரசுக் காப்பகத்திலிருந்து மாயமான 6 சிறுமிகள்; தேடிக் கண்டுபிடித்த போலீஸ்! – தொடரும் விசாரணை | police rescued girls who ran away from the government home in erode

ஈரோடு மாவட்டம், ஆர்.என்.புதூரில் அரசு குழந்தைகள் காப்பகம் செயல்பட்டு வருகிறது. இந்தக் காப்பகத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமிகள் உட்பட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 50-க்கும் மேற்பட்ட சிறுமிகள் அரசால் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். சமீபத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஈரோடு, பெருந்துறை தனியார் மருத்துவமனைகள் உள்ளிட்ட சில மருத்துவமனைகளால் சிறுமியின் கருமுட்டை விற்பனை செய்யப்பட்ட விவகாரத்தில் தொடர்புடைய 16 வயது சிறுமியும் இதில் பராமரிக்கப்பட்டு வந்தார்.இந்தக் காப்பகத்தில் நேற்று மதியம் கருமுட்டை விவகாரத்தில் தொடர்புடைய 16 வயது சிறுமி…

சென்னை மாநகராட்சி காங்கிரஸ் கட்சித் தலைவராக எம்.எஸ். திரவியம் நியமனம்

சென்னை: சென்னை மாநகராட்சி காங்கிரஸ் கட்சித் தலைவராக எம்.எஸ். திரவியம் அவர்களை நியமனம் செய்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளார். திருச்சி மாநகராட்சி காங்கிரஸ் கட்சித் தலைவராக பி. கோவிந்தராஜன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். Source link

சாதாரண சளி, இருமல் பிரச்னைக்கு மருத்துவரிடம் செல்ல வேண்டுமா?

அவள் விகடன் மற்றும் காவேரி மருத்துவமனை இணைந்து, `மழைக்காலம்… சளி, ஆஸ்துமா, அலர்ஜி பிரச்னைகளை சமாளிப்பது எப்படி?’ என்ற கட்டணமில்லா வெபினாரை சமீபத்தில் நடத்தியது. சென்னை, காவேரி மருத்துவமனையைச் சேர்ந்த இதயம் மற்றும் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை மருத்துவர் ஸ்ரீவாஸ் ராஜகோபாலா, திருச்சி காவேரி மருத்துவமனையைச் சேர்ந்த நுரையீரல் மருத்துவர் ஏ. நாகராஜன் ஆகியோர், நிகழ்ச்சியில் பங்கேற்று ஆலோசனைகளை வழங்கினர்.நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் கேட்ட கேள்விகளுக்கு மருத்துவர்கள் அளித்த பதில்கள் இதோ:மழைக்காலம்குறட்டைப் பிரச்னையால் நான்கு தலையணை வரை…

Basics Of Football: சிவப்பு மற்றும் மஞ்சள் அட்டைகள் ஏன் பயன்படுத்தப்படுகிறது?

கால்பந்து உலகக்கோப்பை கத்தாரில் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. எங்கு பார்த்தாலும் கால்பந்தை பற்றிய பேச்சாகவே இருக்கிறது. ஆயினும் கிரிக்கெட் அளவுக்கு கால்பந்து நமக்கு பரிச்சயமானதில்லை. கால்பந்தின் பல விதிமுறைகள் புரிந்துக்கொள்ள கடினமானதாகவே இருக்கிறது. அவற்றை எளிமைப்படுத்தி விளக்கவே ‘Basics Of Football’ என்ற இந்தப் பகுதி..Warning : மெஸ்சி – ரொனால்டோ என்ற பெயரளவுக்கு மட்டுமே கால்பந்தை அறிந்து வைத்திருக்கும் நபர்களுக்கானதே இந்தப் பகுதி. மேற்படி விவரம் தெரிந்தவர்கள் நேர விரயம் செய்யாமல் போட்டிகளை காண செல்லலாம்.ஆரம்ப…

இப்படி வித்தியாசமான முறையில் தக்காளி சட்னி செய்து பாருங்கள்… டேஸ்ட் வேற லெவல்…

இட்லி எல்லா காலத்திற்கும் அனைவருக்கும் பிடித்த உணவாக இருக்கிறது. அந்த இட்லிக்கு செய்யப்படும் சட்னி இன்னும் கூடுதல் சுவையைத்தரும். அந்த வகையில் நாம் அடிக்கடி செய்து சாப்பிடும் தக்காளி சட்னியை கூடுதல் சுவையுடன் வேறுமாதிரி செய்வதற்கான செய்முறை தான் இப்போது நீங்கள் தெரிந்துக்கொள்ள போகிறீர்கள்.தேவையான பொருட்கள் :பச்சை மிளகாய் 4நல்லெண்ணெய் தே.அளவுஇஞ்சி ஒரு இன்ச்பூண்டு பற்கள் – 8சீரகம் – 1/2 ஸ்பூன்புளி – 1 இன்ச்நறுக்கிய தக்காளிப் பழம் – 4மஞ்சள் தூள், உப்பு தே.அளவுகொத்தமல்லி…

டெல்லி படுகொலை: முண்டம் ஒரு பக்கம், கை-கால்கள் மறுபக்கம் – மனைவி, மகனை போலீஸ் பிடித்தது எப்படி?

பட மூலாதாரம், Getty Images24 நிமிடங்களுக்கு முன்னர்டெல்லி காவல்துறையின் குற்றப்பிரிவு, ஒருவரின் கொலை தொடர்பாக அவரது மனைவி மற்றும் வளர்ப்பு மகனைக் கைது செய்துள்ளது.அந்த பெண்ணும் அவரது மகனும் சேர்ந்து அஞ்சன் தாஸைக் கொன்று உடலைத் துண்டு துண்டாக வெட்டிக் குளிர்சாதன பெட்டியில் வைத்துப் பின்னர் வெவ்வேறு இடங்களில் வீசி அப்புறப்படுத்தியதாக காவல் துறை கூறுகிறது. இந்த படுகொலை டெல்லி மெஹ்ரௌலியில் நடந்த ஷ்ரத்தா படுகொலையை ஒத்திருப்பதாகக் கூறப்படுகிறது. ஷ்ரத்தாவின் லிவ்-இன் பார்ட்னர் அஃப்தாப்பும் ஷ்ரத்தாவைக் கொன்று,…

தெலுங்கு தேசம் கட்சி தலைவர் குறித்து தரக்குறைவாக பேசிய ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் நிர்வாகி-திருப்பதி போலீஸ் நிலையத்தில் புகார்

திருப்பதி: தெலுங்கு தேசம் கட்சி தலைவரை தரக்குறைவாக பேசிய ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி நிர்வாகியை கைது செய்ய வலியுறுத்தி திருப்பதி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். தெலுங்கு தேசம் கட்சி இளைஞர் அணி சார்பில் மாநில செயலாளர் ரவி தலைமையில் திருப்பதி  அலிபிரி  காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் சின்ன ரெட்டப்பாவிடம் தெலுங்கு தேச கட்சி சந்திரபாபுவை தரக்குறைவாக பேசியவரை கைது செய்ய வேண்டும் என நேற்று புகார் மனு அளித்தனர். இதுகுறித்து, இளைஞர் அணி மாவட்ட செயலாளர்…

`லேசான காய்ச்சலுக்கு ஆன்டிபயாடிக் பரிந்துரைக்க வேண்டாம்!’ – மருத்துவர்களுக்கு ICMR அறிவுறுத்தல்| No antibiotic for mild fever – Indian Council of Medical Research warns

லேசான காய்ச்சல் மற்றும் மூச்சுக்குழாய் அழற்சி போன்றவற்றுக்கு ஆன்டிபயாடிக் மருந்துகள் எடுத்துக் கொள்வது தவறானது. அதோடு நோயாளியை நேரடியாகப் பரிசோதித்தும், ஆய்வக பரிசோதனைகளை வைத்தும், நோயை உண்டாக்கிய கிருமிகளையும், என்ன நோய் என்பதையும்  கண்டறிந்து அதற்கேற்றாற்போல, ஆன்டிபயாடிக் மருந்துகளை மருத்துவர்கள் பரிந்துரைக்க வேண்டும். மிகவும் நோய்வாய்ப்பட்ட நபர்கள் மட்டுமே ஆன்டிபயாடிக் சிகிச்சையை எடுத்துக் கொள்ள வேண்டும். கடுமையான செப்சிஸ், செப்டிக் ஷாக், சமூக அளவில் பரவக்கூடிய நிமோனியா, வென்டிலேட்டர் சிகிச்சையில் இருக்கும் போது ஏற்பட்ட நிமோனியா போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆன்டிபயாடிக்…

FIFA WC 2022 | “எங்கள் பண்பாடு பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?” – ஜெர்மனி முன்னாள் வீரர் மீது ஈரான் பயிற்சியாளர் ஆவேசம் | FIFA WC 2022

கத்தாரில் நடைபெறும் உலகக் கோப்பை 2022 கால்பந்து தொடரில் வேல்ஸ் அணியை 2-0 என்று ஈரான் வீழ்த்தியதைத் தொடர்ந்து முன்னாள் ஜெர்மனி அணி வீரரும் இப்போதைய ஃபிபா டெக்னிக்கல் ஆய்வுக்குழுவில் உள்ளவருமான ஜர்கன் கிளின்ஸ்மேன், ஈரான் அணியின் கால்பந்து பற்றியும் ஈரானின் கலாச்சாரம் பற்றியும் கூறிய கருத்துகள் பெரும் சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளன. வெள்ளிக்கிழமையன்று நடைபெற்ற வேல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஈரான் 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. ஆனால் ஈரானின் கால்பந்து முரட்டுத்தனமானது என்றும் ஏகப்பட்ட…

Doctor Vikatan: எடையைக் குறைக்க உதவுமா பார்லி? | Doctor Vikatan: Can Barley Help You Lose Weight?

உடலிலுள்ள தேவையற்ற கெட்ட நீரை வெளியேற்றும் தன்மை கொண்டது பார்லி. அதனால்தான் எடைக்குறைப்பு முயற்சியில் உள்ளவர்களுக்கும் பார்லி பரிந்துரைக்கப்படுகிறது. பார்லியில் உள்ள நியாசின் எனும் வைட்டமின் பி சத்தானது மெனோபாஸ் பருவத்திலுள்ள பெண்களுக்குப் பெரிய அளவில் உதவக்கூடியது. அந்த வயதில் அதிகரிக்கும் உடல் எடையைக் குறைக்க உதவக்கூடியது.மாதிரிப் படம் கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் எக்ளாம்சியா எனும் பாதிப்புக்கும் பார்லி கஞ்சி பரிந்துரைக்கப்படும். அவர்களுக்கு ரத்தத்தில் புரதச்சத்து அதிகரித்து, கை, கால்கள் வீங்கும். அதைக் குணமாக்க பார்லி தண்ணீர் குடிக்க…