துபாயிலிருந்து வந்த உத்தரவு; கேரளாவுக்குக் கடத்தப்பட்ட ரூ.14.70 கோடி பணம்; 4 பேர் சிக்கிய பின்னணி!
வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா காவல் நிலைய எல்லைக்குஉட்பட்ட சின்னகோவிந்தம்பாடி பகுதி தேசிய நெடுஞ்சாலையில், 29-ம் தேதி நள்ளிரவு 11 மணியளவில், எஸ்.ஐ பாஸ்கர் மற்றும் முதல்நிலைக் காவலர் பிரேம் இருவரும் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அந்த நேரத்தில், சென்னையிலிருந்து பெங்களூரு செல்லும் மார்க்கத்தில், 4 பேர் கும்பல் ஒரு காரிலிருந்து லாரியின் கேபின் பகுதிக்கு ஏதோ பண்டல்களை அவசர அவசரமாக ஏற்றிக் கொண்டிருந்தனர். இதைப் பார்த்து சந்தேகமடைந்த காவலர்கள் இருவரும், அந்தக் கும்பல் அருகே சென்று விசாரிக்கத்…






