மதவாதத்தை வைத்து அரசியல் நடத்தி ஏமாற்ற நினைத்தால் இறுதியில் என்ன கதி ஏற்படும் என்பதற்கு இலங்கையே சாட்சி : திமுக நாளேடு!!
சென்னை : மக்களைப் பற்றிக் கவலைப்படாமல் மதவாதத்தை வைத்தும், இனவெறியை வைத்தும் அரசியல் நடத்தி ஏமாற்ற நினைத்தால் இறுதியில் என்ன கதி ஏற்படும் என்பதற்கு இலங்கையே சாட்சி என்று திமுக அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையே சாட்சி என்ற தலைப்பில் முரசொலியில் வெளியிடப்பட்டுள்ள தலையங்கத்தில் ‘இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ஷே, ராணுவ விமானம் மூலம் மாலத்தீவுக்கு தப்பிப் போய்விட்டார் என்றும், அங்கு முதலில் அவரது விமானம் தரையிறங்க அனுமதிக்கப்படவில்லை என்றும், அதன் பிறகு மாலத்தீவு அதிபர்…









