Daily Archives: July 13, 2022

மகளிருக்கான யூரோ கால்பந்து தொடர் | 8 கோல்கள் அடித்து இங்கிலாந்து சாதனை | Euro Football Series for women England record by scoring 8 goals

லண்டன்: மகளிருக்கான யூரோ கால்பந்து தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள இங்கிலாந்து தனது 2-வது ஆட்டத்தில், இரு முறை சாம்பியனான நார்வே அணியை எதிர்த்து விளையாடியது. நேற்று முன்தினம் இரவு தெற்கு இங்கிலாந்தில் உள்ள பிரைட்டன் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து மகளிர் அணி 8-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. யூரோ கால்பந்து வரலாற்றில் ஆடவர், மகளிர் என எந்த ஒரு ஆட்டத்திலும் இதற்கு முன்னர்…

மதுரை கறி தோசை முதல் கேரள மிளகாய் மட்டன் வரை.. டாப் 5 மட்டன் ரெசிபிக்கள்

Mutton Recipe | இந்த பதிவில் ஆரோக்கியமான, சுவையான டாப் 5 மட்டன் ரெசிபிகள் எப்படி செய்வது என்பதை பார்ப்போம். நன்றி

உ.பி: பாலியல் தொல்லை; ஓடும் காரிலிருந்து கீழே குதித்து காயமடைந்த இளம்பெண் – ஹோட்டல் உரிமையாளர் கைது! | Girl jumps off moving SUV to escape molestation; sustains injuries

உத்தரப்பிரதேச மாநிலம், லக்னோவில் ஒருவர் தன் மருமகளுடன் ஹோட்டல் ஒன்றை நடத்தி வந்துள்ளார். கடந்த புதன்கிழமை 21 வயது பெண் ஒருவர் அந்த ஹோட்டலில் வேலைக்குச் சேர்ந்துள்ளார். இந்த நிலையில், நேற்று இரவு ஹோட்டல் வேலை முடிந்து அந்தப் பெண் வீட்டுக்குப் புறப்பட்டுள்ளார். அப்போது ஹோட்டல் உரிமையாளர் அந்தப் பெண்ணை தன்னுடன் காரில் வருமாறும், வீட்டில் விட்டுவிடுவதாகவும் கூறி வற்புறுத்தியுள்ளார். அதனால் அந்தப் பெண்ணும் காரில் ஏறியுள்ளார்.பாலியல் தொல்லைசித்திரிப்புப் படம்கார் நகரத்தொடங்கிய சிறிது நேரத்திலேயே ஹோட்டல் உரிமையாளர்…

அதிமுக துணைப்பொதுச் செயலாளர்களாக கே.பி. முனுசாமி, நத்தம் விஸ்வநாதன் நியமனம்: எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு

சென்னை: கடந்த 11-ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி நியமிக்கப்படிருந்தார். அதுமட்டும் அல்லாமல் புதிய நிர்வாகிகள் அனைவரையும் நியமிக்க கூடிய அதிகாரம் குறித்து சட்ட விதிகள் திருத்தம் செய்யப்பட்டு இடைக்கால பொதுச்செயலாளருக்கு அந்த அதிகாரம் வழங்கப்பட்டிருந்தது. மேலும் துணை பொதுச்செயலாளரை நியமிக்கும் அதிகாரமும் அவருக்கு வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில், புதிய நிர்வாகிகளை தற்போது நியமித்து அது தொடர்பான அறிவிப்பையும் அதிகார பூர்வமகா எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ளார். அதில் அதிமுகவிற்கு துணை பொதுச்செயலாளர்…

கருத்தடை மாத்திரை வாங்க இனி மருந்துசீட்டு வேண்டாம்; அமெரிக்காவில் முதன்முறையாக ஒப்புதல்?! I US to approve over the counter birth control pills for first time

எனவே, அமெரிக்காவில் கருத்தடை மாத்திரைகள் மருத்துவ பரிந்துரையின்றி அனைவருக்கும் கிடைக்க வழிவகை செய்யவேண்டும் என பிரெஞ்சு மருந்தக நிறுவனமான ஹெச்.ஆர்.ஏ., அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்திற்கு விண்ணப்பத்தை பதிவு செய்துள்ளது. உணவு மற்றும் மருந்து நிர்வாகம் இதற்கு ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில், அமெரிக்க மக்கள் மருந்துசீட்டு இன்றி கருத்தடை மாத்திரைகளை பெற முடியும்.Tablets (Representational Image)Pixabay1973-ம் ஆண்டிலிருந்து அமெரிக்காவில் உபயோகப்படுத்துவதற்கு அங்கீகரிக்கப்பட்ட கருத்தடை மாத்திரை, ஓபில் (Opill). ஆனால் இந்த மாத்திரை மருந்துசீட்டு கொடுத்தால் மட்டுமே…

ஷாஹின் அஃப்ரீடியை பின்னுக்குத் தள்ளி பும்ரா நம்பர் 1- டி20யில் சூரியகுமார் பாய்ச்சல் – News18 Tamil

ஐசிசி தரவரிசை: ஓவல் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிராக 19 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் ஜஸ்பிரித் பும்ரா நம்பர் 1 ஒருநாள் பந்துவீச்சாளர் ஆனார், அதே நேரத்தில் சூர்யகுமார் யாதவ் இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் 117 ரன்கள் எடுத்து டி20 பேட்டர்களில் நம்பர் 5 இடத்தைப் பிடித்தார்.ஜஸ்பிரித் பும்ரா மூன்று இடங்கள் முன்னேறி முதலிடத்தை பிடித்தார். நியூசிலாந்தின் ட்ரென்ட் போல்ட் முதலிடத்தில் இருந்து 2வது இடத்தையும், பாகிஸ்தானின் ஷாஹீன் அப்ரிடி 3வது இடத்தையும்…

ரணில் தொலைக்காட்சி உரை: ‘ஜனநாயகத்திற்கு எதிரான ஃபாசிச அச்சுறுத்தலை நிறுத்த வேண்டும்’

36 நிமிடங்களுக்கு முன்னர்இலங்கையின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டைவிட்டு தப்பிச் சென்றுவிட்ட நிலையில் அந்நாட்டின் பொறுப்பு ஜனாதிபதியாக பிரதமர் ரணில் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், நாட்டில் நடைபெற்று வரும் போராட்டம் குறித்து அவர் தொலைக்காட்சி மூலம் உரையாற்றியுள்ளார்.அதில் அமைதியை நிலைநாட்ட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள ராணுவத்திற்கு ஆணையிட்டுள்ளதாக ரணில் தெரிவித்துள்ளார்.மேலும் தனது அலுவலகம் மற்றும் பிற அரசு அலுவலகத்தை கைப்பற்றியுள்ள போராட்டக்காரர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேற வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.”நாம் அரசியலமைப்பு சட்டத்தை கிழித்து எறிய முடியாது.…

ஜனாதிபதி தேர்தலில் போட்டி ஜெகன்-சந்திரபாபுவிடம் முர்மு ஆதரவு கோரினார்

திருமலை : தேசிய ஜனநாயக கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் திரவுபதி முர்மு, ஆந்திராவில் முதல்வர் ஜெகன் மோகன் அளித்த தேநீர் விருந்தில் பங்கேற்று ஆதரவு திரட்டினார்.  தேசிய ஜனநாயக கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் திரவுபதி முர்மு. இவர், ஆந்திராவில் ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் ஆதரவை பெறுவதற்காக முதல்வர் ஜெகன்மோகன் இல்லத்திற்கு நேற்று வந்தார். பின்னர் முதல்வர் ஜெகன்மோகன் அளித்த தேநீர் விருந்தில் பங்கேற்ற திரவுபதி முர்முவுக்கு விஜயவாடா கனக துர்கையம்மன் கோயில் பிரசாதம், புகைப்படம் வழங்கி …

`கோவிட் தொற்றின் முடிவு அருகில் இல்லை’ – உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை..! | “The end of the Covid infection is not near’ – World Health Organization warns..!

இந்நிலையில் செவ்வாய்க் கிழமையன்று நடைபெற்ற செய்தியாளர்கள் மாநாட்டில் பேசிய உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ராஸ் அதானம் கேப்ரியேசிஸ், ”வைரஸின் புதிய அலைகள் தோன்றிக் கொண்டே உள்ளன. இது கோவிட் 19-ன் முடிவு நாம் நினைக்கும் அளவுக்கு அவ்வளவு அருகில் இல்லை என்பதைக் காட்டி உள்ளது.Covid Outbreak (Representational Image)AP Photo/Jean-Francois Badiasமேலும், கோவிட் தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது கவலையளிக்கிறது. இது சுகாதார அமைப்புகள் மற்றும் சுகாதார ஊழியர்கள் மீது அழுத்தம் கொடுக்கிறது. எனவே அரசு…

ENG vs IND: பும்ரா – ஷமி பௌலிங் பார்ட்னர்ஷிப்; பதிலின்றி தவித்த இங்கிலாந்தின் அட்டாக்கிங் ஃபார்முலா! | India dominates England’s attacking formula with its fast bowling lineup

முதலில் ராய் மற்றும் ரூட் இருவரையுமே டக் அவுட்டாக்கி அதிர்ச்சித் தொடக்கம் கொடுத்தார். ஃபுல் லெந்தில் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே நகர்ந்த பந்து, இன்சைட் எட்ஜாகி ராயை வெளியேற்ற, களத்தில் கிடைத்த எக்ஸ்ட்ரா பவுன்ஸ், ரூட்டின் விக்கெட்டுக்கான ரூட்டு போட பும்ராவுக்கு உதவியது. களத்தில் பும்ரா, பேட்ஸ்மேன் மற்றும் பண்ட் மட்டும்தான் இருக்கிறார்களா என்னும் அளவு அவர்களின் மீதே பார்வையாளர்களின் முழு கவனமும் இருக்க வேண்டியிருந்தது. ஸ்கெட்சை பும்ரா போட, பேட்ஸ்மேன் அதில் விழ, கேட்ச்களைத் தவற…

1 2 3