“வீடு இடிப்புகளைக் கலவரத்துடன் தவறாக தொடர்புப்படுத்துகிறார்கள்!" – நீதிமன்றத்தில் உ.பி அரசு
நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குறிய வகையில் கருத்து தெரிவித்த பா.ஜ.க முன்னாள் செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மாவைக் கைதுசெய்யக் கோரி உத்தரப்பிரதேசம், பீகார், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் போராட்டம் நடைபெற்றது. குறிப்பாக உத்தரப்பிரதேசத்தின் பிரக்யாராஜில் நடைபெற்ற போராட்டம் தொடர்பாக, அரசியல் செயற்பாட்டாளர் ஜாவேத் முகமது என்பவரின் வீடு இடிக்கப்பட்டது.இதைத் தொடர்ந்து புல்டோசர்கள் மூலம் வீடுகள் இடிப்பதைத் தடுக்கக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் ஜமியத் உலாமா-ஐ-ஹிந்த் என்ற இஸ்லாமிய அமைப்பு முறையீடு செய்தது. இந்த மனு மீதான விசாரணை…







