திருவண்ணாமலை விசாரணை கைதி தங்கமணி உயிரிழந்த வழக்கு விசாரணை, சிபிசிஐடிக்கு மாற்றம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்!!!
சென்னை : திருவண்ணாமலை விசாரணை கைதி தங்கமணி உயிரிழந்த வழக்கு விசாரணை, சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது,’கடந்த ஏப்ரல் 29 அன்று எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் இந்த அவையில் நேரமில்லா நேரத்தில் பேசியபோது, திருவண்ணாமலை சம்பவம் குறித்து இந்த அவையினுடைய கவனத்திற்கு அவர் கொண்டு வந்தார். அதற்கு விளக்கமளித்து நான் பேசியபோது ஒன்றைக் குறிப்பிட்டுச் சொன்னேன். உடற்கூராய்வு முடிந்ததற்குப்பின்பு, இந்த அவைக்கு அதனை நான்…








