வடக்கு சீனாவின் ஷான்சி மாகாணத்தின் சியான் பகுதியைச் சேர்ந்தவர் சியோமா என்ற 23 வயது இளைஞர். இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்ச்சியான தும்மல் மற்றும் சளியால் அவதிப்பட்டு வந்துள்ளார்.
இதனை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முதலில் அவருக்கு பாரம்பரிய சீன மருத்துவ முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை தோல்வி அடைந்த நிலையில் பிரபலமான மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஒவ்வாமை மற்றும் நாசி அலர்ஜி இருப்பதை கண்டறிந்த மருத்துவர்கள், அவரது நாசியில் ஏதோ ஒரு பொருள் அடைத்துக்கொண்டிருப்பதை கண்டறிந்தனர். இதனைத் தொடர்ந்து நாசியை எண்டோஸ்கோபி மூலம் பரிசோதனை செய்த மருத்துவர்கள் நாசி” குழியில் 2 செ.மீ அளவுள்ள பகடை (Dice) இருப்பதைக் கண்டறிந்தனர்.