அதேபோல், ஷர்மிகா சொல்வதுபோல ஒரே குலோப் ஜாமில் மூன்று கிலோ எடை ஒரேநாளில் கூடுவது என்பதற்கு வாய்ப்பே இல்லை. ஒருநாளில் மூன்று வேளைக்குப் பதில் ஆறு வேளை எனச் சாப்பாடு சாப்பிட்டால்கூட மூன்று கிலோ எடை கூடாது. மேலும், குப்புறப்படுத்தால் மார்பகப் புற்றுநோய் வரும் என்கிறார். இதற்கு, மருத்துவ ரீதியாக எந்த ஆதாரமும் இல்லை. மருத்துவ நிபுணர்களின் ஆராய்ச்சிக்குட்பட்ட தகவல்களை மட்டும்தான் ஏற்றுக்கொள்ளமுடியும். தானே, கருத்துகளை மக்களிடம் திணிக்கக்கூடாது. ஒரு மருத்துவர் மருத்துவரீதியான கருத்துகளை மட்டும்தான் சொல்லவேண்டும். மருத்துவத்துக்கு அப்பாற்பட்டு இப்படியெல்லாம் சொல்லக்கூடாது” என்றவரிடம்,

“எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். ஆகிய அலோபதி மருத்துவப்படிப்புகளுக்கு தனி கவுன்சில்கள் உள்ளன. அதாவது, எம்.பி.பி.எஸ் படித்தவர்கள் சென்னை அரும்பாக்கம் பூந்தமல்லி நெடுஞ்சாலையிலுள்ள தமிழ்நாடு மருத்துவக் கவுன்சிலில் (Tamilnadu Medical Council) பதிவு செய்வார்கள். அதேபோல், பி.டி.எஸ் பல் மருத்துவம் படித்தவர்கள் சென்னை கோயம்பேட்டிலுள்ள தமிழ்நாடு பல் மருத்துவ கவுன்சிலில் (Tamil Nadu Dental Council) பதிவு செய்வார்கள்.
அப்படித்தான் அரசால் அங்கீகரிக்கப்பட்ட இந்திய மருத்துவமான சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி, யோகா அண்ட் நேச்சுரோபதி ஆகிய ஐந்தரை வருடப் பட்டப்படிப்பை முடித்தவர்கள் சென்னை அரும்பாக்கம் அறிஞர் அண்ணா மருத்துவனை வளாகத்திலுள்ள சித்த மருத்துவ கவுன்சில், தமிழ்நாடு இந்திய மருத்துவக் கவுன்சில் (Tamilnadu Board of Indian Medicine), ஹோமியோபதி மருத்துவ கவுன்சில் ஆகியவற்றில் பதிவு செய்யவேண்டும். அப்படிப் பதிவு செய்யப்படாதவர்கள் மருத்துவச் சிகிச்சை அளிக்கக்கூடாது. அதேபோல், இந்திய மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்த பரம்பரை வைத்தியர்கள் மட்டுமே சிகிச்சை அளிக்கமுடியும். முறையாகச் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி, யோகா அண்ட் நேச்சுரோபதி படித்த மருத்துவர்கள் யாரும் கைது செய்யப்படுவதில்லை.