விமானத்தில் சக பயணி மரணம்: தம்பதிக்கு அருகில் சடலத்தை கிடத்திய விமான நிறுவனம் – என்ன நடந்தது?

Share

விமானத்தில் சக பயணி மரணம்: பக்கத்து இருக்கையில் பிணத்தை கிடத்திய விமான நிறுவனம்

கத்தார் ஏர்வேஸ் விமானத்தில் உயிரிழந்த பயணி ஒருவரின் சடலம் தங்களுக்கு அருகில் வைக்கப்பட்ட அதிர்ச்சியளிக்கும் சம்பவம் குறித்து ஆஸ்திரேலிய தம்பதியினர் பேசியுள்ளனர்.

மிட்செல் ரிங், ஜெனிஃபர் கோலின் என்ற தம்பதி வெனிஸ் நகருக்கு விடுமுறைக் காலத்தை கழிக்கச் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் மெல்போர்னில் இருந்து தோஹாவுக்கு விமானம் மூலம் செல்ல வேண்டியிருந்தது.

அந்த விமானப் பயணத்தின்போது, தங்களுக்கு அருகிலுள்ள பயணிகள் நடைபாதையில் ஒரு பெண் இறந்ததாக ஆஸ்திரேலியாவின் சேனல் 9 செய்தி ஊடகத்துக்கு அந்தத் தம்பதியினர் தெரிவித்தனர்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

தங்கள் விமானப் பயணத்தின் மீதமுள்ள நான்கு மணிநேரத்திற்கு, பிற இருக்கைகள் காலியாக இருந்தபோதிலும், அவரை நகர்த்த முன்வராமல், விமானப் பணியாளர்கள் அவரது சடலத்தை மிட்செலுக்கு அருகில் போர்வையால் மூடி வைத்ததாக தம்பதியினர் கூறுகின்றனர்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com