விடாமுயற்சி நவீன ராமாயணமா? – இயக்குநர் மகிழ் திருமேணி பிபிசிக்கு பேட்டி

Share

மகிழ் திருமேனி, அஜித் , விடாமுயற்சி, லைகா

பட மூலாதாரம், Suresh Chandra / X

இன்று (டிச. 06) வியாழக்கிழமை, அஜித் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் ‘விடாமுயற்சி’ திரைப்படம் வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்தில் ரெஜினா, திரிஷா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இத்திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் குறித்து பல்வேறு தகவல்களை இந்த பேட்டியில் பிபிசி தமிழுடன் பகிர்ந்துகொண்டார் இயக்குநர் மகிழ் திருமேனி.

விடாமுயற்சி திரைப்படத்துக்கு விளம்பரத்தில் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை என்ற கருத்து உள்ளது. அது உண்மையா?

நாங்கள் அஸர்பைஜான் நாட்டில் படப்பிடிப்பு நடத்த முடிவு செய்தோம். படப்பிடிப்புக்கான இடங்களைத் தேர்வு செய்யச் சென்றபோது அங்கு கடுமையான வெயில் காய்ந்துகொண்டிருந்தது. ஆனால், அங்கு படப்பிடிப்பு ஆரம்பித்தவுடன் வானிலை மொத்தமாக மாறிவிட்டது. இதை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. முதல்கட்ட படப்பிடிப்பே நிச்சயமின்றி ஆகிவிட்டது. எங்களால் எடுத்து முடிக்க முடியுமா என்று யோசிக்க ஆரம்பித்துவிட்டோம்.

படப்பிடிப்பு ஆரம்பித்த சில நாட்களிலேயே வானிலை மாற ஆரம்பித்துவிட்டது. அங்குதான் பிரச்னை ஆரம்பித்தது. ஒரு கட்டத்தில் நாங்கள் மீண்டும் இந்தியா திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால், திரும்பிவிட்டோம்.

அடுத்த 2-3 வாரங்களில் மீண்டும் அங்கு செல்லலாம் என்று நினைத்திருந்தோம். ஆனால், நாங்கள் திரும்பிச் செல்ல 3 மாதங்கள் வரை ஆகிவிட்டது. இதனால் நடிகர்கள் நமக்காக ஒதுக்கிய தேதிகளிலும் மாற்றங்கள் வந்தன. இப்படி ஒரு நிச்சயமற்ற சூழலில் படத்தின் அப்டேட் என்று எதாவது கொடுத்துவிட்டு, அது பொய்த்துப் போகக் கூடாது என்கிற கவலையும் அச்சமும் இருந்தது. இதுதான் நாங்கள் அப்போதிலிருந்தே பெரிதாக அப்டேட், விளம்பரங்கள் கொடுக்காததற்கு காரணம்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com