வருஷநாடு: பலத்த காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட விவசாயிகள்; கரடி தாக்கியதா என விசாரணை!

Share

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி தாலுகா வருஷநாடு அருகே கோவில்பாறை பகுதியில் பஞ்சதாங்கி மலையடிவாரத்தில் இலவம், எலுமிச்சை, கொட்டை முந்திரி விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் வருஷநாடு அருகே உள்ள தர்மராஜபுரம் பகுதியைச் சேர்ந்த கருப்பையா(56) என்பவர் இலவமர தோட்டத்திலும், தங்கம்மாள்புரம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன்(45) என்பவர் அவருடைய எலுமிச்சை தோட்டத்திலும் உடலில் பலத்த காயங்களுடன் சடலமாக கிடந்தனர்.

சடலத்தை மீட்ட போலீஸார்

சடலத்தை மீட்ட போலீஸார்

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் கடமலைக்குண்டு போலீஸாரும், கண்டமனூர் வனச்சரக அதிகாரிகளும் நிகழ்விடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் இறந்த இருவரின் உடலில் இருந்த காயங்களை வைத்து இருவரையும் கரடி தாக்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com